குற்றவாளிகளை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த நபர் யார்? அப்படியே உறவினர்கள் பார்க்க விரும்பினாலும், பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் விதியை மீறி குற்றவாளிகளைச் சந்திக்கச் சலுகை வழங்கியது யார்? என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளைச் சந்திப்பதற்குத் தகவல் தெரிவித்தவர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹாரன் பால், பாபு, அருளானந்தம், அருண் குமார் உட்பட 9-பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் திருநாவுக்கரசு சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று வழக்கு விசாரணைக்காகத் திருநாவுக்கரசு உட்பட 5-பேரையும் காவல்துறை தனி வாகனத்தில் கோவை மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது கோவை விமான நிலையம் அருகே சென்ற போது இவர்களது வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது. வாகனம் நின்றதும் அதற்கு ஏற்கனவே காத்திருந்த குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 5-பேரின் உறவினர்களும் அவர்களைச் சந்தித்தனர்.
ஐந்து நிமிடங்களுக்கு மேலாகக் குற்றவாளிகள் தங்கள் உறவினர்களுடன் பேசியதாகத் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. தொடர்ந்து 7-போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழியாகத்தான் குற்றவாளிகள் அழைத்துச் செல்லப்படும் வாகனம் வரும் சரியாக இத்தனை மணி அளவில் இந்த இடத்தில் நீங்கள் காத்திருந்தால் அவர்களைச் சந்திக்கலாம் என்பதை எப்படி உங்களுக்குத் தெரியும் எனவே அவர்களுக்கு யாரோ ஒரு நபர் தகவல் கொடுத்துள்ளார்.
அதன்படியே உறவினர்களும் அங்கு காத்திருந்த சந்தித்துள்ளனர். குற்றவாளிகளை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த நபர் யார் அப்படியே உறவினர்கள் பார்க்க விரும்பினாலும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் விதியை மீறி குற்றவாளிகளைச் சந்திக்கச் சலுகை வழங்கியது.
எதற்காக யாராவது சந்திக்க அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். என்பது குறித்தும் உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹாரன் பால், பாபு, அருளானந்தம், அருண் குமார் உட்பட 9-பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் திருநாவுக்கரசு சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று வழக்கு விசாரணைக்காகத் திருநாவுக்கரசு உட்பட 5-பேரையும் காவல்துறை தனி வாகனத்தில் கோவை மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர்.
அப்போது கோவை விமான நிலையம் அருகே சென்ற போது இவர்களது வாகனம் திடீரென நிறுத்தப்பட்டது. வாகனம் நின்றதும் அதற்கு ஏற்கனவே காத்திருந்த குற்றம்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்ட 5-பேரின் உறவினர்களும் அவர்களைச் சந்தித்தனர்.
ஐந்து நிமிடங்களுக்கு மேலாகக் குற்றவாளிகள் தங்கள் உறவினர்களுடன் பேசியதாகத் தெரிகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. தொடர்ந்து 7-போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழியாகத்தான் குற்றவாளிகள் அழைத்துச் செல்லப்படும் வாகனம் வரும் சரியாக இத்தனை மணி அளவில் இந்த இடத்தில் நீங்கள் காத்திருந்தால் அவர்களைச் சந்திக்கலாம் என்பதை எப்படி உங்களுக்குத் தெரியும் எனவே அவர்களுக்கு யாரோ ஒரு நபர் தகவல் கொடுத்துள்ளார்.
அதன்படியே உறவினர்களும் அங்கு காத்திருந்த சந்தித்துள்ளனர். குற்றவாளிகளை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்த நபர் யார் அப்படியே உறவினர்கள் பார்க்க விரும்பினாலும் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் விதியை மீறி குற்றவாளிகளைச் சந்திக்கச் சலுகை வழங்கியது.
எதற்காக யாராவது சந்திக்க அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். என்பது குறித்தும் உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.