திறந்தவெளியில்‌ குப்பை கொட்டினால்‌ சட்டப்படி அபராதம்-‌ மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவு.!!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, திறந்தவெளியில்‌ குப்பை கொட்டினால்‌ சட்டப்படி அபராதம்‌ விதிக்க உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, திறந்தவெளியில்‌ குப்பை கொட்டினால்‌ சட்டப்படி அபராதம்‌ விதிக்க உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.72 காட்டூர்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்‌ பணியாளர்களின்‌ பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ தூய்மைப்பணியாளா்களின்‌ வருகைப்‌ பதிவேடுகளை ஆய்வு செய்த பின்னர்‌, தூய்மைப்பணியாளர்கள்‌ நேரம்‌ தவறாமல்‌ பணிக்கு வருகை தர வேண்டும்‌.



வீடுதோறும்‌ குப்பைகளைச் சேகரிக்கும்‌ போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை எனத் தரம்‌ பிரித்துச் சேகரிக்க வேண்டும்‌. மழைநீர்‌ வடிகால்‌ கால்வாய்களில்‌ அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி மழை நீர் தேங்காமல்‌ செல்லும்‌ வகையில்‌ கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும்‌.

பொதுமக்கள்‌ மற்றும்‌ வணிகர்கள்‌ திறந்தவெளியில்‌ குப்பையைக் கொட்டக்‌ கூடாது மீறினால்‌ அவர்கள்‌ மீது சட்டப்படி அபராதம்‌ விதிக்க வேண்டும்‌. இதனை மாநகராட்சி உதவி ஆணையர்கள்‌, சுகாதார அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்‌.

மேலும்‌, கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைத்‌ தவிர்க்கப் பொதுமக்களிடையே போதிய விழிப்புணவினை ஏற்படுத்திட வேண்டும்‌. தூய்மையான மாநகராட்சியாகத் திகழ தங்களுடைய பணிகளைச் சிறப்பாகச் செய்திட வேண்டும்‌.

அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌. கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌. தடுப்பூசி போடாதவர்கள்‌ வருகின்ற 23.10.2021 அன்று நடைபெறும்‌ மெகா தடுப்பூசி முகாமில்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌ என தெரிவித்தார்‌.



மேலும்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.72 காட்டூர் பகுதிகளில்‌, தூய்மைப்பணியாளர்கள்‌ மக்கும்‌, மக்கா குப்பைகளைத் தரம்‌ பிரித்துச் சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதைப் பார்வையிட்டு,



அவினாசி சாலை, உப்பிலிபாளையம்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி கட்டணக்‌ கழிப்பிடத்தின்‌ சுகாதாரம்‌ குறித்து ஆய்வு செய்து அங்குச் சுத்தம்‌ செய்யப்படுவதைக் கணக்கிடுவதற்காக ஒட்டப்பட்டிருந்த ஸ்வச்‌ பாரத்‌ வில்லைகளை (STICKERS) பார்வையிட்ட பின்னர்‌,



உப்பிலிபாளையம்‌ சிக்னல்‌ பகுதியில்‌ சென்டர் மீடியம்‌, சாலையின்‌ இடது, வலது பக்கங்களில்‌ உள்ள பழுதுகளைச் சரிசெய்து இருபுறமும்‌ வண்ண செடிகள்‌ நட்டு பராமரிக்கவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா சம்மந்தப்பட்ட பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ சுந்தாராஜன்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ திருமால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...