திறந்தவெளியில்‌ குப்பை கொட்டினால்‌ சட்டப்படி அபராதம்-‌ மாநகராட்சி ஆணையாளர்‌ உத்தரவு.!!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, திறந்தவெளியில்‌ குப்பை கொட்டினால்‌ சட்டப்படி அபராதம்‌ விதிக்க உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, திறந்தவெளியில்‌ குப்பை கொட்டினால்‌ சட்டப்படி அபராதம்‌ விதிக்க உத்தரவிட்டார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.72 காட்டூர்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்‌ பணியாளர்களின்‌ பணிகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ தூய்மைப்பணியாளா்களின்‌ வருகைப்‌ பதிவேடுகளை ஆய்வு செய்த பின்னர்‌, தூய்மைப்பணியாளர்கள்‌ நேரம்‌ தவறாமல்‌ பணிக்கு வருகை தர வேண்டும்‌.



வீடுதோறும்‌ குப்பைகளைச் சேகரிக்கும்‌ போது மக்கும்‌ குப்பை, மக்காத குப்பை எனத் தரம்‌ பிரித்துச் சேகரிக்க வேண்டும்‌. மழைநீர்‌ வடிகால்‌ கால்வாய்களில்‌ அடைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி மழை நீர் தேங்காமல்‌ செல்லும்‌ வகையில்‌ கால்வாயினை சுத்தப்படுத்திட வேண்டும்‌.

பொதுமக்கள்‌ மற்றும்‌ வணிகர்கள்‌ திறந்தவெளியில்‌ குப்பையைக் கொட்டக்‌ கூடாது மீறினால்‌ அவர்கள்‌ மீது சட்டப்படி அபராதம்‌ விதிக்க வேண்டும்‌. இதனை மாநகராட்சி உதவி ஆணையர்கள்‌, சுகாதார அலுவலர்கள்‌, பணியாளர்கள்‌ தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்‌.

மேலும்‌, கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களைத்‌ தவிர்க்கப் பொதுமக்களிடையே போதிய விழிப்புணவினை ஏற்படுத்திட வேண்டும்‌. தூய்மையான மாநகராட்சியாகத் திகழ தங்களுடைய பணிகளைச் சிறப்பாகச் செய்திட வேண்டும்‌.

அனைவரும்‌ முகக்கவசம்‌ அணிந்து பணியாற்ற வேண்டும்‌. கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திட வேண்டும்‌. தடுப்பூசி போடாதவர்கள்‌ வருகின்ற 23.10.2021 அன்று நடைபெறும்‌ மெகா தடுப்பூசி முகாமில்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌ என தெரிவித்தார்‌.



மேலும்‌, மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.72 காட்டூர் பகுதிகளில்‌, தூய்மைப்பணியாளர்கள்‌ மக்கும்‌, மக்கா குப்பைகளைத் தரம்‌ பிரித்துச் சேகரிக்கும்‌ பணிகளில்‌ ஈடுபட்டுவருவதைப் பார்வையிட்டு,



அவினாசி சாலை, உப்பிலிபாளையம்‌ பகுதியிலுள்ள மாநகராட்சி கட்டணக்‌ கழிப்பிடத்தின்‌ சுகாதாரம்‌ குறித்து ஆய்வு செய்து அங்குச் சுத்தம்‌ செய்யப்படுவதைக் கணக்கிடுவதற்காக ஒட்டப்பட்டிருந்த ஸ்வச்‌ பாரத்‌ வில்லைகளை (STICKERS) பார்வையிட்ட பின்னர்‌,



உப்பிலிபாளையம்‌ சிக்னல்‌ பகுதியில்‌ சென்டர் மீடியம்‌, சாலையின்‌ இடது, வலது பக்கங்களில்‌ உள்ள பழுதுகளைச் சரிசெய்து இருபுறமும்‌ வண்ண செடிகள்‌ நட்டு பராமரிக்கவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா சம்மந்தப்பட்ட பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ சுந்தாராஜன்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ திருமால்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...