வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில் வரும் 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவை: தென்மேற்கு பருவமழை விலகி வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், தென் மேற்கு பருவ மழை தீவிரம் காட்டி உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெய்யும் கன மழையால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கேரளா மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் அணைகள் நிரம்பி, பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில், வரும் 26ம் தேதி முதல், வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்கு பருவ மழை 26ல் துவங்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், தென் மேற்கு பருவ மழை தீவிரம் காட்டி உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெய்யும் கன மழையால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கேரளா மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் அணைகள் நிரம்பி, பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில், வரும் 26ம் தேதி முதல், வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்கு பருவ மழை 26ல் துவங்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.