தென்மேற்கு பருவமழை விலகி வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில் வரும் 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.


கோவை: தென்மேற்கு பருவமழை விலகி வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், தென் மேற்கு பருவ மழை தீவிரம் காட்டி உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக பெய்யும் கன மழையால், தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கேரளா மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் அணைகள் நிரம்பி, பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கில், வரும் 26ம் தேதி முதல், வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்கு பருவ மழை 26ல் துவங்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...