கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6-பேர் கைது: ரூ.99.20 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்.!!

கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.99.20 லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6-பேரை கைது செய்து கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்களை போலீஸ் கைப்பற்றியது.



கோவை: கோவையில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.99.20-லட்சம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 6-பேரை கைது செய்து கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்களை போலீஸ் கைப்பற்றியது.

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்துப் பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாகக் கூறி ஒரு கும்பல், கேரளாவைச் சேர்ந்த நபர்களிடம் சோதனை செய்து காட்டி வருவதாகச் செட்டிபாளையம் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதை அடுத்து அங்கு சென்ற காவல்துறை வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள், கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வீட்டிலிருந்த 8-பேரிடமும் காவல்துறை தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரிடியம் மற்றும் ரைஸ் புல்லிங் விற்பனை மோசடிக்குக் கூடியிருந்தது தெரியவந்தது.

முதல்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் ராணிப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ்குமார், சூரியகுமார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த போஜராஜ், கோவையைச் சேர்ந்த முருகேசன் சேர்ந்த செந்தில்குமார், வெங்கடேஷ் பிரபு என்பதும் இவர்கள் கேரளாவைச் சேர்ந்த ரைஸ் புல்லிங் மோசடி கும்பலை சேர்ந்த சாஜி என்பவருடன் சேர்ந்து பணத்தேவை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக ரைஸ் புல்லிங் தேவைப்படுவோரை இடைத்தரகர்கள் மூலம் தேர்ந்தெடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

தற்போது கேரளாவைச் சேர்ந்த மகரூப், அப்துல் கலாம் ஆகிய இரண்டு பேரை அணுகி தங்களிடம் 2-ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியம் ரைஸ் புல்லிங் இருப்பதாகக் கூறிய இந்த கும்பல் பல தவணைகளாக ரூ.27-லட்சம் வரை பணத்தைப் பெற்றுள்ளனர்.

ஆனால் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படாமல் இருக்க இந்த கும்பல் சோதனை செய்து காட்டியும் பணம் பறித்து வந்துள்ளனர். சாதாரண வெங்கல செம்பை பெட்டிக்கு வைத்து, பெட்டிக்குள் மிளகாய் பிரேவை அடித்து வைத்துக்கொள்கின்றனர்.

பின்னர் வாங்க வருவோரிடம் செய்வோரிடம் கவச உடைகளை அணிந்து கொண்டு வெளியே எடுக்கும் போது அந்த இரிடியத்திற்கு சக்தி உள்ளது போல காட்டி ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.



இந்த கும்பலை 6-பேரையும் பிடித்த காவல்துறை அவர்களிடமிருந்து 99.20-லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இரண்டு கவச உடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் 2-கார்களை பறிமுதல் செய்தனர்.



மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவான கேரளாவைச் சேர்ந்த சாஜி என்பவரை இரண்டு தனிப்படை அமைத்து காவல்துறை தேடி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...