கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையின் இலக்காக தமிழ்நாடு முழுவதும் 200 கோடி நிர்ணயம் செய்துள்ளனர். கோவையில் ரூ.25 கோடி நிர்ணயம் செய்துள்ளனர்.
கோவை: கோவையில் கோஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.
இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் ஆதரவும் தான் காரணம்.
இந்த நிலையில், கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கோவை வ.உ.சி சாலையில் உள்ள மருதம் கோஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார்.

மேலும், கோ-ஆப்டெக்ஸில் 30% தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையின் இலக்காக தமிழ்நாடு முழுவதும் 200 கோடி நிர்ணயம் செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் 25 கோடி நிர்ணயம் செய்துள்ளனர்.

மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மங்கையர் விரும்பும் மென்பட்டு சேலைகள், சுப முகூர்த்த திருமண பட்டு சேலைகள், ஆர்கானிக் சேலைகள், பருத்தி சேலைகள், காட்டன் சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார், ரெடிமேட் சட்டைகள், வேஷ்டிகள். கைலிகள் ஆகியவை, நவீன டிசைன்களில் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் ஆதரவும் தான் காரணம்.
இந்த நிலையில், கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கோவை வ.உ.சி சாலையில் உள்ள மருதம் கோஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார்.
மேலும், கோ-ஆப்டெக்ஸில் 30% தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையின் இலக்காக தமிழ்நாடு முழுவதும் 200 கோடி நிர்ணயம் செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் 25 கோடி நிர்ணயம் செய்துள்ளனர்.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மங்கையர் விரும்பும் மென்பட்டு சேலைகள், சுப முகூர்த்த திருமண பட்டு சேலைகள், ஆர்கானிக் சேலைகள், பருத்தி சேலைகள், காட்டன் சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார், ரெடிமேட் சட்டைகள், வேஷ்டிகள். கைலிகள் ஆகியவை, நவீன டிசைன்களில் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.