கோவையில் கோஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனை ஆரம்பம்..! மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!!

கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையின் இலக்காக தமிழ்நாடு முழுவதும் 200 கோடி நிர்ணயம் செய்துள்ளனர். கோவையில் ரூ.25 கோடி நிர்ணயம் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் கோஆப்டெக்ஸ் தீபாவளி தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் ஆதரவும் தான் காரணம்.

இந்த நிலையில், கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.



அதன் ஒரு பகுதியாக, கோவை வ.உ.சி சாலையில் உள்ள மருதம் கோஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து, முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார்.



மேலும், கோ-ஆப்டெக்ஸில் 30% தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. கோஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையின் இலக்காக தமிழ்நாடு முழுவதும் 200 கோடி நிர்ணயம் செய்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் 25 கோடி நிர்ணயம் செய்துள்ளனர்.



மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மங்கையர் விரும்பும் மென்பட்டு சேலைகள், சுப முகூர்த்த திருமண பட்டு சேலைகள், ஆர்கானிக் சேலைகள், பருத்தி சேலைகள், காட்டன் சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார், ரெடிமேட் சட்டைகள், வேஷ்டிகள். கைலிகள் ஆகியவை, நவீன டிசைன்களில் உற்பத்தி செய்யப்பட்டு கோ-ஆப்டெக்ஸ் நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...