இந்த விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செ. தாமோதரன் அதிமுக கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
கோவை: கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்.எல்.ஏ., செ.தாமோதரன் மூத்த நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
அதிமுக பொன்விழாவையொட்டி கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி.வேலுமணி வழிகாட்டுதலோடு இன்று கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் அண்ணா நகரில் அதிமுக பொன்விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செ. தாமோதரன் கலந்துகொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் அங்கு இருந்த மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி மரியாதை செய்தார்.
இதில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, சிக்கலாம்பாளையம் கிளை செயலாளர் முத்துசாமி, அண்ணாநகர் கிளை செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் கலாமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ராதாகிருஷ்ணன், பிரபு, லட்சுமணன், தங்கராஜ், கார்த்திகேயன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுக பொன்விழாவையொட்டி கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி.வேலுமணி வழிகாட்டுதலோடு இன்று கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் அண்ணா நகரில் அதிமுக பொன்விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செ. தாமோதரன் கலந்துகொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் அங்கு இருந்த மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி மரியாதை செய்தார்.
இதில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, சிக்கலாம்பாளையம் கிளை செயலாளர் முத்துசாமி, அண்ணாநகர் கிளை செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் கலாமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ராதாகிருஷ்ணன், பிரபு, லட்சுமணன், தங்கராஜ், கார்த்திகேயன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.