கிணத்துக்கடவு அருகே அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்.எல்.ஏ., செ.தாமோதரன் மூத்த நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!

இந்த விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செ. தாமோதரன் அதிமுக கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.


கோவை: கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்.எல்.ஏ., செ.தாமோதரன் மூத்த நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

அதிமுக பொன்விழாவையொட்டி கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் கட்சி கொடியேற்றி ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். பி.வேலுமணி வழிகாட்டுதலோடு இன்று கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையம் அண்ணா நகரில் அதிமுக பொன்விழா கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செ. தாமோதரன் கலந்துகொண்டு அதிமுக கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர் அங்கு இருந்த மூத்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்புகளை வழங்கி மரியாதை செய்தார்.

இதில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு நகர செயலாளர் மூர்த்தி, சிக்கலாம்பாளையம் கிளை செயலாளர் முத்துசாமி, அண்ணாநகர் கிளை செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் கலாமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ராதாகிருஷ்ணன், பிரபு, லட்சுமணன், தங்கராஜ், கார்த்திகேயன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...