கோவையில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால் மாநகராட்சி முற்றுகையிடப்படும் - வேலூர் இப்ராகிம் எச்சரிக்கை..!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கம் பகுதி அருகே உள்ள தியாகி சிவராம் நகர் பகுதியில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை உள்ளதாக தெரிவித்தார்.


கோவை: கழிவு நீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால் மாநகராட்சி முற்றுகையிடப்படும் என பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் கோவையில் செய்தியாளர்களை இன்று பாஜக அலுவலகத்தில் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கம் பகுதி அருகே உள்ள தியாகி சிவராம் நகர் பகுதியில் கழிவு நீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை உள்ளது. இதுவரை அப்பிரச்சனையை திமுக அரசாங்கம் சரி செய்யவில்லை, இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு தேவை. பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால் மாநகராட்சி முற்றுகையிடப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.



மேலும், ஏழை இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிப்பதற்கான உதவியை கோவை மாவட்ட பாஜக செய்துள்ளது என்ற அவர், தொடர்ந்து இஸ்லாமியர்களின் வாழ்வாதாரம் காப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

பணியிட மாற்றம், பணியிடை நீக்கம் உள்ளிட்ட செயல்பாடுகளால் அரசு ஊழியர்களின் எதிர்ப்பை திமுக அரசு பெற்றுள்ளது என்று கூறிய அவர், தற்போது காவல்துறையின் மூலம் அத்துமீறும் அரசாக திமுக அரசாங்கம் இருக்கிறது என்றார்.

மேலும், திமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சீர்கெட்டு போயிருக்கிறது, காவல்துறையை வைத்து என்னை மிரட்டுகிறார்கள். தர்காவிற்கு செல்லும் போது என்னை வழிமறித்து கைது செய்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என்று குற்றம்சாட்டினார்.

கோவிலில் உள்ள தங்க நகைகளை விற்கும் திட்டத்தால் பல்வேறு ஊழல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலில் திமுக அரசாங்கம் ஈடுபடுகிறது.

திருமாவளவனை திருநங்கைகளோடு கூட ஒப்பிட முடியாது. பிரதமரை கொலைகாரன் என்று கூறும் இவர்கள் தேச விரோதிகள். மின்சார வாரியம் குறித்து மாநிலத் தலைவர்‌ அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை அல்ல. ஆதாரம் இல்லாமல் ஒருபோதும் பாஜக எந்த குற்றச்சாட்டையும் முன் வைப்பதில்லை.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...