வால்பாறை காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.!!

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனையொட்டி, வால்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேக விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் இன்று அன்னாபிஷேக விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சந்திரன் பூமிக்கு மிக அருகில் முழு ஒளியையும் பூமியில் வீச செய்யும் தினம். அந்த ஒளி ஆற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும். இதனை முன்னிட்டு வால்பாறையில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. லிங்கத் திருமேனியாக இருக்கும் காசிவிஸ்வநாதருக்கு அன்னத்தால் அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டது.



இறைவனுக்கு அபிஷேகம் செய்து இறைவனின் திருமேனியை மூடும் அளவிற்கு அன்னம் சாத்தப்பட்டது. தொடர்ந்து பழங்கள் காய்கறிகள் இனிப்புகள் வகைகளால் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க இறைவனுக்குத் தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காலத்திற்குப் பின் இன்று தான் முதல் முறையாக இந்நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டு இறைவனைத் தரிசித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...