கோவை மாநகராட்சி (தெற்கு) பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயர் அழிக்கப்பட்டதால் பரபரப்பு

குளத்துப்பாளையம் பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால், இன்று பெயர் பலகையில் அவர் பெயர் அழிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகத்தில் உள்ள சமூக ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயர் அழிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் அடையாளங்களை அழித்து, போலியாக திமுகவினர் தங்களை அடையாளப்படுத்த முயற்ச்சி செய்வதாக கோவை அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், கோவை குளத்துபாளையம் பகுதியில் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால், இன்று அந்த அலுவலகத்தின் முன்பு அமைச்சரின் பெயர் எழுதப்பட்டு இருந்த திறப்பு விழா தகவல்களையும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயரும் அழிக்கப்பட்டுள்ளதாக, அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, மக்களின் நலன் கருதி இந்த சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதாகவும், அங்கு மக்கள் இரத்த அழுத்தம், சக்கரை நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர்.



பெயர் பலகையில் தகவல்கள் அழிக்கப்பட்டதால், அப்பகுதியில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கூடியதால், அங்கு வந்த காவல்துறையினர், கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, அதிமுகவினர் வழக்கறிஞர்களுடன் சென்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் குறித்து புகார் அளித்தனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...