குளத்துப்பாளையம் பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால், இன்று பெயர் பலகையில் அவர் பெயர் அழிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பிறப்பு, இறப்பு பதிவு அலுவலகத்தில் உள்ள சமூக ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெயர் அழிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் அடையாளங்களை அழித்து, போலியாக திமுகவினர் தங்களை அடையாளப்படுத்த முயற்ச்சி செய்வதாக கோவை அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், கோவை குளத்துபாளையம் பகுதியில் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால், இன்று அந்த அலுவலகத்தின் முன்பு அமைச்சரின் பெயர் எழுதப்பட்டு இருந்த திறப்பு விழா தகவல்களையும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயரும் அழிக்கப்பட்டுள்ளதாக, அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, மக்களின் நலன் கருதி இந்த சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதாகவும், அங்கு மக்கள் இரத்த அழுத்தம், சக்கரை நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர்.

பெயர் பலகையில் தகவல்கள் அழிக்கப்பட்டதால், அப்பகுதியில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கூடியதால், அங்கு வந்த காவல்துறையினர், கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, அதிமுகவினர் வழக்கறிஞர்களுடன் சென்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் குறித்து புகார் அளித்தனர்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், கோவை குளத்துபாளையம் பகுதியில் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். ஆனால், இன்று அந்த அலுவலகத்தின் முன்பு அமைச்சரின் பெயர் எழுதப்பட்டு இருந்த திறப்பு விழா தகவல்களையும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பெயரும் அழிக்கப்பட்டுள்ளதாக, அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்குச் சென்று மக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, மக்களின் நலன் கருதி இந்த சுகாதார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதாகவும், அங்கு மக்கள் இரத்த அழுத்தம், சக்கரை நோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர்.
பெயர் பலகையில் தகவல்கள் அழிக்கப்பட்டதால், அப்பகுதியில் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கூடியதால், அங்கு வந்த காவல்துறையினர், கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, அதிமுகவினர் வழக்கறிஞர்களுடன் சென்று கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையாளர் சரவணன் மீது கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் குறித்து புகார் அளித்தனர்.