கோவையில் கனமழை எதிரொலி: கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து- உயிர்தப்பிய பக்தர்கள்.!!

கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திடீரென கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது. சுவர் இடிந்து விழும் பொழுது அந்த பகுதிகள் பக்தர்கள் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாகக் காயம் மற்றும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.



கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள உள்ள ஒரு கோவிலில் சுற்றுச்சுவர் தொடர் மழை காரணமாக திடீரென இடிந்து விழுந்ததில், பக்தர்கள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

கோவை கணபதி, கட்டபொம்மன் வீதியில், கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் கடந்த 30-வருடத்திற்கு மேலாக அதே பகுதியில் கருப்பராயன் கோவில் உருவாகி சுற்றுச்சுவர் எழுப்பி மரத்திற்கு அடியில் தொடர்ந்து பூஜைகள் அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது.



சுவர் இடிந்து விழும் பொழுது அந்த பகுதிகள் பக்தர்கள் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாகக் காயம் மற்றும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது:-

நாங்கள் பல ஆண்டுகளாக கருப்பராயன் கோயிலைப் பாதுகாத்து வணங்கி வருகிறோம். இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு எங்களுக்குச் சிறந்த ஒரு கோவிலை உருவாக்கித் தர வேண்டும். ஒரு பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

அடுத்த பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் விழுவதற்குத் தயாராக உள்ளது. அதை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு அப்புறப்படுத்தி எங்களுக்கு விரைவில் பாதுகாப்பான சுற்றுச்சூழல் கூடிய கோயில் உருவாக்கித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...