கோவையில் கனமழை எதிரொலி: கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து- உயிர்தப்பிய பக்தர்கள்.!!

கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திடீரென கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது. சுவர் இடிந்து விழும் பொழுது அந்த பகுதிகள் பக்தர்கள் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாகக் காயம் மற்றும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.



கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள உள்ள ஒரு கோவிலில் சுற்றுச்சுவர் தொடர் மழை காரணமாக திடீரென இடிந்து விழுந்ததில், பக்தர்கள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

கோவை கணபதி, கட்டபொம்மன் வீதியில், கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்கள் கடந்த 30-வருடத்திற்கு மேலாக அதே பகுதியில் கருப்பராயன் கோவில் உருவாகி சுற்றுச்சுவர் எழுப்பி மரத்திற்கு அடியில் தொடர்ந்து பூஜைகள் அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வருகின்றனர்.



இந்த நிலையில், கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது.



சுவர் இடிந்து விழும் பொழுது அந்த பகுதிகள் பக்தர்கள் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாகக் காயம் மற்றும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது:-

நாங்கள் பல ஆண்டுகளாக கருப்பராயன் கோயிலைப் பாதுகாத்து வணங்கி வருகிறோம். இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு எங்களுக்குச் சிறந்த ஒரு கோவிலை உருவாக்கித் தர வேண்டும். ஒரு பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

அடுத்த பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் விழுவதற்குத் தயாராக உள்ளது. அதை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு அப்புறப்படுத்தி எங்களுக்கு விரைவில் பாதுகாப்பான சுற்றுச்சூழல் கூடிய கோயில் உருவாக்கித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...