வால்பாறை அருகே காட்டுயானைகள் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தியதால், பொது மக்கள் அச்சம். காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை.
வால்பாறை: வால்பாறை அருகே காட்டுயானைகள் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தியதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையை ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளிருந்த அரிசி கோதுமை பருப்பு சர்க்கரை போன்றவை களை வெளியே எடுத்துப் போட்டு தின்று கடையை உடைத்து சேதப்படுத்தியது.

காட்டுயானைகளை வனத்துறையினரும் எஸ்டேட் பொதுமக்களும் அப்பகுதியிலிருந்து பட்டாசு வெடித்து சத்தம் போட்டு அப்பகுதியிலிருந்து விரட்டினர்.

காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையை ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளிருந்த அரிசி கோதுமை பருப்பு சர்க்கரை போன்றவை களை வெளியே எடுத்துப் போட்டு தின்று கடையை உடைத்து சேதப்படுத்தியது.
காட்டுயானைகளை வனத்துறையினரும் எஸ்டேட் பொதுமக்களும் அப்பகுதியிலிருந்து பட்டாசு வெடித்து சத்தம் போட்டு அப்பகுதியிலிருந்து விரட்டினர்.
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.