கோவையில் ராணுவ வீரர் என கூறி ஆன்லைன் மூலமாக கார் விற்பனை: டிரைவரிடம் 1-லட்சம் மோசடி.!!

கோவையில் கார் விற்பனை செய்வதாக கூறி ரூ.1-லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் என கூறி கைவரிசை காட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கார் விற்பனை செய்வதாக கூறி ரூ.1-லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் என கூறி கைவரிசை காட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த டேவிட் ஜான் வயது 26, டிரைவர். இவர் சொந்தமாக பயன்படுத்தப்பட்ட கார் வாங்க திட்டமிட்டார். இதற்காக ஓ.எல்.எக்ஸ் ஆப் பை பதிவிறக்கம் செய்து தன்னிடம் உள்ள பணத்திற்கு ஏற்ற வகையில் கார் உள்ளதா? எனப் பார்த்தார். அப்போது அதில் ஒருவர் தான் ராணுவ வீரர் என்றும் தான் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதால் தன்னுடைய காரை விற்பனை செய்வதாக பதிவிட்டு இருந்தார்.

இதனை அடுத்து டேவிட் ஜான் அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர் தன்னிடம் நிறைய பேர் கார் கேட்டுள்ளதாகவும் உங்களுக்கு கார் வேண்டும் என்றால் உடனடியாக G-pay மூலமாக முன்பணம் ரூபாய் 99-ஆயிரத்து 400-அனுப்பி வைக்குமாறு கூறினார்.

குறைந்த விலையில் கார் கிடைப்பதால் ராணுவ வீரர் என அவர் கூறியதால் நம்பிக்கை அடைந்த டேவிட் ஜான் உடனடியாக பணத்தை அந்த நபருக்கு அனுப்பி வைத்தார். சிறிது நேரத்திற்குப் பின்னர் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டேவிட் ஜான் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் என கூறி ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...