கோவையில் ராணுவ வீரர் என கூறி ஆன்லைன் மூலமாக கார் விற்பனை: டிரைவரிடம் 1-லட்சம் மோசடி.!!

கோவையில் கார் விற்பனை செய்வதாக கூறி ரூ.1-லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் என கூறி கைவரிசை காட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கார் விற்பனை செய்வதாக கூறி ரூ.1-லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ராணுவ வீரர் என கூறி கைவரிசை காட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த டேவிட் ஜான் வயது 26, டிரைவர். இவர் சொந்தமாக பயன்படுத்தப்பட்ட கார் வாங்க திட்டமிட்டார். இதற்காக ஓ.எல்.எக்ஸ் ஆப் பை பதிவிறக்கம் செய்து தன்னிடம் உள்ள பணத்திற்கு ஏற்ற வகையில் கார் உள்ளதா? எனப் பார்த்தார். அப்போது அதில் ஒருவர் தான் ராணுவ வீரர் என்றும் தான் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதால் தன்னுடைய காரை விற்பனை செய்வதாக பதிவிட்டு இருந்தார்.

இதனை அடுத்து டேவிட் ஜான் அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில் பேசிய நபர் தன்னிடம் நிறைய பேர் கார் கேட்டுள்ளதாகவும் உங்களுக்கு கார் வேண்டும் என்றால் உடனடியாக G-pay மூலமாக முன்பணம் ரூபாய் 99-ஆயிரத்து 400-அனுப்பி வைக்குமாறு கூறினார்.

குறைந்த விலையில் கார் கிடைப்பதால் ராணுவ வீரர் என அவர் கூறியதால் நம்பிக்கை அடைந்த டேவிட் ஜான் உடனடியாக பணத்தை அந்த நபருக்கு அனுப்பி வைத்தார். சிறிது நேரத்திற்குப் பின்னர் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டேவிட் ஜான் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் என கூறி ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...