மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது


கோவை காந்திபுரம் ஒன்றாவது வீதியை சேர்ந்தவர் பழனியம்மாள் (83). அதே பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனியம்மாள் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது கையில் இருந்த 2 சவரன் தங்க நகை காணாமல் போயுள்ளதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அவரது பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீர்கான் (24) என்பவர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில், இன்று (வியாழன்) சமீர்கான் காந்திபுரம் வடகோவை மேம்பாலத்தின் அருகே நடந்துகொண்டிருந்த போது அவரை காவல் துறையினர் பிடிக்க முயற்சித்துள்ளனர். இதையறிந்த அவர் தப்பியோட முயன்று மேம்பாலத்தின் மேல் இருந்து குதித்துள்ளார். இதில், அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவரை பிடித்த காவல் துறையினர் கைது செய்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.



பின் அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சலாம் என்பவரது மகன் சமீர்கான் என்பதும், கேரளாவில் ஒரு உணவு விடுதியில் பணியாற்றி வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன்பு நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கோவை வந்தது தெரியவந்துள்ளது.



Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...