திவான்சாபுதூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் கலைவாணி சிலம்பரசன் பதவியேற்பு.!!

திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சசி முன்னிலையில் பதவியேற்று மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 25-ஆண்டு பிறகு மீண்டும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி திமுக வசம் வந்ததால், மிகுந்த உற்சாகமடைந்த திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த கலைவாணி சிலம்பரசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் போட்டியிட்டு 2297-வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



இதனைத் தொடர்ந்து அவர் இன்று திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சசி முன்னிலையில் பதவி ஏற்று மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இருபத்தி ஐந்து ஆண்டுக் காலத்திற்குப் பிறகு மீண்டும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி திமுக வசம் வந்தது.

மிகுந்த உற்சாகமடைந்த திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சாந்தி தேவி தர்மராஜ், மாணிக்கவேல், ராஜகாளியம்மன் உட்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...