திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சசி முன்னிலையில் பதவியேற்று மற்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 25-ஆண்டு பிறகு மீண்டும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி திமுக வசம் வந்ததால், மிகுந்த உற்சாகமடைந்த திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியத்தில் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கான இடைத்தேர்தலில் திமுகவை சேர்ந்த கலைவாணி சிலம்பரசன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று ஊராட்சி மன்ற தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
கோவை மாவட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் போட்டியிட்டு 2297-வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அவர் இன்று திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சசி முன்னிலையில் பதவி ஏற்று மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இருபத்தி ஐந்து ஆண்டுக் காலத்திற்குப் பிறகு மீண்டும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி திமுக வசம் வந்தது.
மிகுந்த உற்சாகமடைந்த திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சாந்தி தேவி தர்மராஜ், மாணிக்கவேல், ராஜகாளியம்மன் உட்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் திமுக சார்பில் கலைவாணி சிலம்பரசன் போட்டியிட்டு 2297-வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் இன்று திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சசி முன்னிலையில் பதவி ஏற்று மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இருபத்தி ஐந்து ஆண்டுக் காலத்திற்குப் பிறகு மீண்டும் ஊராட்சிமன்றத் தலைவர் பதவி திமுக வசம் வந்தது.
மிகுந்த உற்சாகமடைந்த திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கன்னிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சாந்தி தேவி தர்மராஜ், மாணிக்கவேல், ராஜகாளியம்மன் உட்பட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.