தாராபுரம் அருகே 100-நாள் வேலையின் போது தேனீக்கள் கொட்டியதில் 20-பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தேனீக்கள் கடித்த நபர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
திருப்பூர்: தாராபுரம் அருகே 100-நாள் வேலையின் போது தேனீக்கள் கொட்டியதில் 20-பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தேனீக்கள் கடித்த நபர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மணக்கடவு பகுதியில் 100-நாள் வேலையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்களை விஷ தேனீக்கள் துரத்தித் துரத்தி கொட்டியது மாரியம்மாள் அழகுமுத்து மருதாயி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தேனீக்கள் கொட்டியதால் சிலருக்கு தலைச்சுற்று வாந்தி மயக்கம் வந்தது. இதனால் தேனீக்கள் கொட்டிய 100- நாள் வேலை தொழிலாளர்களை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில் பலருக்கு கைகள், முகம், கண்கள், முதுகு போன்ற பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் வீக்கம் ஏற்பட்டு வலியால் அவதியடைந்தனர்.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தேனீக்கள் கொட்டிய தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவர் சிவபாலன் இடம் தேனீக்கள் கொட்டிய தொழிலாளர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மணக்கடவு பகுதியில் 100-நாள் வேலையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்களை விஷ தேனீக்கள் துரத்தித் துரத்தி கொட்டியது மாரியம்மாள் அழகுமுத்து மருதாயி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தேனீக்கள் கொட்டியதால் சிலருக்கு தலைச்சுற்று வாந்தி மயக்கம் வந்தது. இதனால் தேனீக்கள் கொட்டிய 100- நாள் வேலை தொழிலாளர்களை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில் பலருக்கு கைகள், முகம், கண்கள், முதுகு போன்ற பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் வீக்கம் ஏற்பட்டு வலியால் அவதியடைந்தனர்.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தேனீக்கள் கொட்டிய தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவர் சிவபாலன் இடம் தேனீக்கள் கொட்டிய தொழிலாளர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.