தாராபுரம் அருகே 100-நாள் வேலையின் போது தேனீக்கள் கொட்டியதில் 20-பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை.!!

தாராபுரம் அருகே 100-நாள் வேலையின் போது தேனீக்கள் கொட்டியதில் 20-பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தேனீக்கள் கடித்த நபர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.


திருப்பூர்: தாராபுரம் அருகே 100-நாள் வேலையின் போது தேனீக்கள் கொட்டியதில் 20-பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தேனீக்கள் கடித்த நபர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மணக்கடவு பகுதியில் 100-நாள் வேலையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்களை விஷ தேனீக்கள் துரத்தித் துரத்தி கொட்டியது மாரியம்மாள் அழகுமுத்து மருதாயி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.



தேனீக்கள் கொட்டியதால் சிலருக்கு தலைச்சுற்று வாந்தி மயக்கம் வந்தது. இதனால் தேனீக்கள் கொட்டிய 100- நாள் வேலை தொழிலாளர்களை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதில் பலருக்கு கைகள், முகம், கண்கள், முதுகு போன்ற பகுதியில் தேனீக்கள் கொட்டியதில் வீக்கம் ஏற்பட்டு வலியால் அவதியடைந்தனர்.



இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று தேனீக்கள் கொட்டிய தொழிலாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதனைத் தொடர்ந்து தலைமை மருத்துவர் சிவபாலன் இடம் தேனீக்கள் கொட்டிய தொழிலாளர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...