அரசின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்.!! கோவைக்கு செந்தில் பாலாஜி நியமனம்.!!

கரூர் மாவட்டத்திலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து கட்சி பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்திவரும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கோவை வளர்ச்சிப் பணிகளைத் துரிதப் படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



கோவை: அரசின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கோவைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கோவை மாவட்ட மக்களுக்குத் தமிழக அரசின் வளர்ச்சிப் பணிகள் சென்றடைய மற்றும் கடந்த கொரோனா காலத்தில் களத்தில் பணிபுரியக் கோவை மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாமல் இருந்து.

இதன் காரணத்தினால் வெவ்வேறு துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் கோவைக்கு வந்து பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வரக்கூடிய சிறப்பு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் முழுமையாகச் சென்றடையத் தமிழகம் முழுவதிலும் மாவட்ட வாரியாக அமைச்சர்களை நேற்று தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

இதில் கரூர் மாவட்டத்திலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து கட்சி பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்திவரும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கோவை வளர்ச்சிப் பணிகளைத் துரிதப் படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும் இயற்கை சீற்றம் நோய்த்தொற்று இன்ன பிற நேரங்களில் அவசரக்கால பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.

அதன்படி வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவை மாவட்டத்திற்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...