அரசின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்.!! கோவைக்கு செந்தில் பாலாஜி நியமனம்.!!

கரூர் மாவட்டத்திலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து கட்சி பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்திவரும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கோவை வளர்ச்சிப் பணிகளைத் துரிதப் படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



கோவை: அரசின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், கோவைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கோவை மாவட்ட மக்களுக்குத் தமிழக அரசின் வளர்ச்சிப் பணிகள் சென்றடைய மற்றும் கடந்த கொரோனா காலத்தில் களத்தில் பணிபுரியக் கோவை மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாமல் இருந்து.

இதன் காரணத்தினால் வெவ்வேறு துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் கோவைக்கு வந்து பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வரக்கூடிய சிறப்பு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் முழுமையாகச் சென்றடையத் தமிழகம் முழுவதிலும் மாவட்ட வாரியாக அமைச்சர்களை நேற்று தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

இதில் கரூர் மாவட்டத்திலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து கட்சி பணிகளைச் சிறப்பாகச் செயல்படுத்திவரும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கோவை வளர்ச்சிப் பணிகளைத் துரிதப் படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட வளர்ச்சி பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும் இயற்கை சீற்றம் நோய்த்தொற்று இன்ன பிற நேரங்களில் அவசரக்கால பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.

அதன்படி வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவை மாவட்டத்திற்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...