கோவையில் திருட்டு போன செல்போன்கள் மீட்பு: திருப்பிக் கொடுத்த காவல் கண்காணிப்பாளர்!!

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்டு மாயமான 141-செல்போன்கள் மாவட்ட சைபர் செல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஒப்படைத்தார்.



கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்டு மாயமான 141-செல்போன்கள் மாவட்ட சைபர் செல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் எஸ்.பி. செல்வநாகரத்தினம்ஒப்படைத்தார்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து செல்போன்கள் திருடப்படுவதாக மாவட்ட சைபர் செல் போலீஸில் புகார்கள் அதிகரித்து வந்தது. இதையடுத்து மாயமான செல்போன்களை கண்டறிய தனிக்கவனம் செலுத்தப்பட்டுத் தேடிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 125-செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



அதன் பின் நிலுவையிலிருந்த 300-க்கு மேற்பட்ட புகார்கள் மீது விசாரணை நடந்த நிலையில் மேலும் 141- செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஒப்படைத்தார்.



இது குறித்து அவர் கூறும்போது, பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கச் செல்லும் இடங்கள், பேருந்துகள் மற்றும் பிட்பாக்கட் மூலம் செல்போன்கள் திருடப்படுவதாகத் தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகார்கள் மீது சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

இதில், மாயமான செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இம்மாதிரி மாயமாகும் செல்போன்களை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிக்கல் உள்ளது. மேலும் செல்போன்களை திருடிச் செல்லும் நபர்கள் பொய்யான காரணங்களைச் சொல்லி கடைகளில் விற்றுச் செல்கின்றனர்.

எனவே செல்போன் கடை உரிமையாளர்களிடம் சில வழிமுறைகளைக் கூறி உள்ளோம். பொதுமக்கள் இம்மாதிரி செல்போன் மாயமானால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் மற்றும் செல்போன்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.



Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...