கோவையில் திருட்டு போன செல்போன்கள் மீட்பு: திருப்பிக் கொடுத்த காவல் கண்காணிப்பாளர்!!

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்டு மாயமான 141-செல்போன்கள் மாவட்ட சைபர் செல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஒப்படைத்தார்.



கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்டு மாயமான 141-செல்போன்கள் மாவட்ட சைபர் செல் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் எஸ்.பி. செல்வநாகரத்தினம்ஒப்படைத்தார்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து செல்போன்கள் திருடப்படுவதாக மாவட்ட சைபர் செல் போலீஸில் புகார்கள் அதிகரித்து வந்தது. இதையடுத்து மாயமான செல்போன்களை கண்டறிய தனிக்கவனம் செலுத்தப்பட்டுத் தேடிய நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 125-செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



அதன் பின் நிலுவையிலிருந்த 300-க்கு மேற்பட்ட புகார்கள் மீது விசாரணை நடந்த நிலையில் மேலும் 141- செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் ஒப்படைத்தார்.



இது குறித்து அவர் கூறும்போது, பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கச் செல்லும் இடங்கள், பேருந்துகள் மற்றும் பிட்பாக்கட் மூலம் செல்போன்கள் திருடப்படுவதாகத் தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகார்கள் மீது சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

இதில், மாயமான செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இம்மாதிரி மாயமாகும் செல்போன்களை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிக்கல் உள்ளது. மேலும் செல்போன்களை திருடிச் செல்லும் நபர்கள் பொய்யான காரணங்களைச் சொல்லி கடைகளில் விற்றுச் செல்கின்றனர்.

எனவே செல்போன் கடை உரிமையாளர்களிடம் சில வழிமுறைகளைக் கூறி உள்ளோம். பொதுமக்கள் இம்மாதிரி செல்போன் மாயமானால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் மற்றும் செல்போன்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...