வால்பாறையில் மேகமூட்டம் காரணமாகத் தேயிலை செடிகளில் கொசு அதிகரிப்பால், நவீன இயந்திரங்கள் மூலம் கொசுவை அழிக்க மருந்து தெளிக்கும் பணியில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. காலை, மதியம், மாலை என்று மூன்று நேரம் மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வால்பாறை:வால்பாறையில் மேகமூட்டம் காரணமாகத் தேயிலை செடிகளில் கொசு அதிகரித்ததால், நவீன இயந்திரங்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப் பட்டுள்ளது கடந்த ஒரு வாரக் காலமாகக் கன மழை பெய்து வந்தது. கடந்த இரு தினங்களாக மேக மூட்டத்துடன் உள்ளது.
இதன் காரணமாக வெயில் குறைந்து மேகமூட்டத்துடன் பருவ நிலை உள்ளது. இதனால் தேயிலை செடிகளில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தேயிலை செடிகளின் குருத்துகளைக் கொசுக்கள் தின்று நாசப்படுத்துகின்றன.
இதனால் தேயிலை செடிகளின் வளர்ச்சி வெகுவாக குறைகின்றது. இதன் காரணமாகத் தேயிலை உற்பத்தியும் பாதிப்படைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கொசுவை அழிக்க நவீன இயந்திரங்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
காலை, மதியம், மாலை என்று மூன்றுநேரம் மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப் பட்டுள்ளது கடந்த ஒரு வாரக் காலமாகக் கன மழை பெய்து வந்தது. கடந்த இரு தினங்களாக மேக மூட்டத்துடன் உள்ளது.
இதன் காரணமாக வெயில் குறைந்து மேகமூட்டத்துடன் பருவ நிலை உள்ளது. இதனால் தேயிலை செடிகளில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. தேயிலை செடிகளின் குருத்துகளைக் கொசுக்கள் தின்று நாசப்படுத்துகின்றன.
இதனால் தேயிலை செடிகளின் வளர்ச்சி வெகுவாக குறைகின்றது. இதன் காரணமாகத் தேயிலை உற்பத்தியும் பாதிப்படைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தேயிலைத் தோட்டப் பகுதிகளில் கொசுவை அழிக்க நவீன இயந்திரங்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் தேயிலைத் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
காலை, மதியம், மாலை என்று மூன்றுநேரம் மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.