பெண்ணிடம் 1.5 மோசடி செய்த வழக்கில் தி.மு.க பிரமுகர் கோவை தங்கம் மருமகன் கைது.!!

தி.மு.க பிரமுகர் கோவை தங்கம் மருமகன் அருண்பிரகாஷ் தன்னை தாக்கியதாக சிந்துஜா அளித்த புகாரின் பேரில் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அருண்பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்த வழக்கில் தி.மு.க பிரமுகர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காளப்பட்டியைச் சேர்ந்த தொழிலதிபர் சிந்துஜா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் அளி த்தார்.

அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ.,வும் திமுக., பிரமுகரின் கோவை தங்கம் மருமகனுமான அருண் பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, ரூ.7-கோடி பணம் பறித்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும், கோவை தங்கம் தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் அருண் பிரகாஷ் உட்பட 3-பேர் மீது கோவை கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் 3-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பிரமுகர் கோவை தங்கம் தான் அந்த பெண்ணை பார்த்தது கூட கிடையாது என்று கூறினார்.

மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தன் மீது அவதூறு பரப்புவதற்காக அந்த பெண்ணை தூண்டி விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த சூழலில் சாய்பாபா காலனியை சேர்ந்த கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் (41) சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் என்பவரிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஐ.பி.சி 420-பிரிவின் கீழ் மோசடி வழக்குப்பதிவு செய்த கோவை குற்றப்பிரிவு போலீசார், அருண் பிரகாஷ் இன்று கைது செய்துள்ளனர்.

முன்னதாக அருண்பிரகாஷ் தன்னை தாக்கியதாக சிந்துஜா அளித்த புகாரின் பேரில் அருண்பிரகாஷ் மீது கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜாமீனில் வெளியே வந்த அவர் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...