பொன்விழாவையொட்டி கிணத்துக்கடவில் அதிமுகவினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்- எம்.எல்.ஏ., தாமோதரன் பங்கேற்பு.!!!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 49-ஆண்டுகள் முடிந்து 50-ஆண்டை அடி எடுத்து வைத்துள்ளது. இதனால் அதிமுகவினர் 50-வது ஆண்டை பொன்விழா ஆண்டாகக் கொண்டாடுகின்றனர்.


கோவை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 49-ஆண்டுகள் முடிந்து 50-ஆண்டை அடி எடுத்து வைத்துள்ளது. இதனால் அதிமுகவினர் 50-வது ஆண்டை பொன்விழா ஆண்டாகக் கொண்டாடுகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று கிணத்துக்கடவு நகரப்பகுதிகளில் அதிமுகவினர் கட்சிக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செ. தாமோதரன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து சிறப்புரை ஆற்றினார்.



இதேபோல் கிணத்துக்கடவு நகரப்பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ரோடு, அம்பேத்கர் வீதி, தேரோடும் வீதி, கிருஷ்ணசாமி புரம் ஆகிய பகுதிகளில் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. மேலும் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, மனோகரன், கண்ணம்மாள், லட்சுமணன், பிரபு, தங்கராஜ், கார்த்திகேயன், கோபால், அரவிந்த், வினுவெங்கடேஷ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...