பொன்விழாவையொட்டி கிணத்துக்கடவில் அதிமுகவினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்- எம்.எல்.ஏ., தாமோதரன் பங்கேற்பு.!!!

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 49-ஆண்டுகள் முடிந்து 50-ஆண்டை அடி எடுத்து வைத்துள்ளது. இதனால் அதிமுகவினர் 50-வது ஆண்டை பொன்விழா ஆண்டாகக் கொண்டாடுகின்றனர்.


கோவை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 49-ஆண்டுகள் முடிந்து 50-ஆண்டை அடி எடுத்து வைத்துள்ளது. இதனால் அதிமுகவினர் 50-வது ஆண்டை பொன்விழா ஆண்டாகக் கொண்டாடுகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று கிணத்துக்கடவு நகரப்பகுதிகளில் அதிமுகவினர் கட்சிக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற விழாவில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான செ. தாமோதரன் கலந்துகொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து சிறப்புரை ஆற்றினார்.



இதேபோல் கிணத்துக்கடவு நகரப்பகுதியில் உள்ள ஆர்.எஸ்.ரோடு, அம்பேத்கர் வீதி, தேரோடும் வீதி, கிருஷ்ணசாமி புரம் ஆகிய பகுதிகளில் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. மேலும் இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் மூர்த்தி, மனோகரன், கண்ணம்மாள், லட்சுமணன், பிரபு, தங்கராஜ், கார்த்திகேயன், கோபால், அரவிந்த், வினுவெங்கடேஷ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...