இந்த கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், 8 மணி நேரம் வேலை, பணி பாதுகாப்பு, அரசு பணியாளர்களுக்கு நிகரான சம்பளம் தர கோரிக்கை வைக்கப்பட்டது.
கோவை: வால்பாறையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் AITUC மாநில செயற்குழு கூட்டம் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் AITUC தொழிற்சங்கம் சார்பாக தமிழ் நாடு டாஸ்மாக் பணியாளர்கள் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பெரியசாமி தலைமையில் மாநில பொதுச் செயலாளர் தனசேகரன் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் மாநில செயற் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட துளசி தாஷ் அவர்கள் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மாநில தலைவர் பணியாளர்களின் ஒற்றுமை குறித்து பேசினார். தமிழ் நாட்டில் அரசு டாஸ்மாக்கில் வேலை செய்யும் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், 8 மணி நேரம் வேலை, பணி பாதுகாப்பு, அரசு பணியாளர்களுக்கு நிகரான சம்பளம் தர அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த செயற்குழு கூட்டத்தில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சரவண குமார் பொள்ளாச்சி, மணிகண்டன் பொள்ளாச்சி, சுந்தர் பொள்ளாச்சி, p.சக்தி திருவண்ணாமலை, வரதராஜன் மாவட்ட செயலாளர் திருவண்ணாமலை, பாண்டியன் மாவட்ட பொறுள்ளர் AITUC, வால்பாறை AITUC கட்சியினர் மோகன் முனியாண்டி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, வரும் நவம்பர் 29ம் தேதி காலை தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு கடை திறக்கும் முன் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் AITUC தொழிற்சங்கம் சார்பாக தமிழ் நாடு டாஸ்மாக் பணியாளர்கள் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பெரியசாமி தலைமையில் மாநில பொதுச் செயலாளர் தனசேகரன் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் மாநில செயற் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட துளசி தாஷ் அவர்கள் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மாநில தலைவர் பணியாளர்களின் ஒற்றுமை குறித்து பேசினார். தமிழ் நாட்டில் அரசு டாஸ்மாக்கில் வேலை செய்யும் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், 8 மணி நேரம் வேலை, பணி பாதுகாப்பு, அரசு பணியாளர்களுக்கு நிகரான சம்பளம் தர அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சரவண குமார் பொள்ளாச்சி, மணிகண்டன் பொள்ளாச்சி, சுந்தர் பொள்ளாச்சி, p.சக்தி திருவண்ணாமலை, வரதராஜன் மாவட்ட செயலாளர் திருவண்ணாமலை, பாண்டியன் மாவட்ட பொறுள்ளர் AITUC, வால்பாறை AITUC கட்சியினர் மோகன் முனியாண்டி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இதனிடையே, வரும் நவம்பர் 29ம் தேதி காலை தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு கடை திறக்கும் முன் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.