வால்பாறையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஏஐடியூசி மாநில செயற்குழு கூட்டம்..!

இந்த கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், 8 மணி நேரம் வேலை, பணி பாதுகாப்பு, அரசு பணியாளர்களுக்கு நிகரான சம்பளம் தர கோரிக்கை வைக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் AITUC மாநில செயற்குழு கூட்டம் தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறையில் AITUC தொழிற்சங்கம் சார்பாக தமிழ் நாடு டாஸ்மாக் பணியாளர்கள் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் பெரியசாமி தலைமையில் மாநில பொதுச் செயலாளர் தனசேகரன் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு டாஸ்மாக் மாநில செயற் கூட்டம் வால்பாறையில் நடைபெற்றது.

முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்ட துளசி தாஷ் அவர்கள் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மாநில தலைவர் பணியாளர்களின் ஒற்றுமை குறித்து பேசினார். தமிழ் நாட்டில் அரசு டாஸ்மாக்கில் வேலை செய்யும் சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தரம், 8 மணி நேரம் வேலை, பணி பாதுகாப்பு, அரசு பணியாளர்களுக்கு நிகரான சம்பளம் தர அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.



இந்த செயற்குழு கூட்டத்தில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் சரவண குமார் பொள்ளாச்சி, மணிகண்டன் பொள்ளாச்சி, சுந்தர் பொள்ளாச்சி, p.சக்தி திருவண்ணாமலை, வரதராஜன் மாவட்ட செயலாளர் திருவண்ணாமலை, பாண்டியன் மாவட்ட பொறுள்ளர் AITUC, வால்பாறை AITUC கட்சியினர் மோகன் முனியாண்டி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



இதனிடையே, வரும் நவம்பர் 29ம் தேதி காலை தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு கடை திறக்கும் முன் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...