இந்த பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் அணைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேண வேண்டும், அமைதியை காக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் - காங்கேயம் சாலை, காயிதே மில்லத் நகர் பள்ளிவாசலின் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளிவாசல் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.

இந்த பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாகச் சென்றனர். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் அணைத்து மதத்தினரும் சமத்துவத்தைப் பேண வேண்டும், அமைதியை காக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டுப் பிரார்த்தனை செய்து குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் - காங்கேயம் சாலை, காயிதே மில்லத் நகர் பள்ளிவாசலின் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளிவாசல் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.
இந்த பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாகச் சென்றனர். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் அணைத்து மதத்தினரும் சமத்துவத்தைப் பேண வேண்டும், அமைதியை காக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டுப் பிரார்த்தனை செய்து குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.