ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் டாக்டரை மாற்ற வேண்டும். தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை: ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் டாக்டரை மாற்ற வேண்டும். தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிராஸ்கட் ரோடு சாலையில் உள்ள ஆரம்பச் சுகாதார மையத்தில் பணிபுரியக்கூடிய டாக்டர் அவருடைய தனியார் கிளினிக்கில் முழு கவனம் செலுத்துவதால், பேறுகாலத்திற்கு வரக்கூடிய பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
உடனடியாக அவரை மாற்றி புதிய டாக்டரை நியமிக்க வேண்டும் என திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கிராஸ்கட் சாலையில் 8-ம் நம்பர் காய்கறி மார்க்கெட் அருகில் கோவை மாநகராட்சி சிடிஎம் ஹோம் மகப்பேறு மருத்துவமனை பல வருடங்களாக இயங்கி வருகிறது இம்மருத்துவமனையில் பெண் டாக்டர் பெண் செவிலியர்கள் பணிபுரிந்து வந்தனர்.
கடந்த காலங்களில் மாதந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப் பட்டு வந்த நிலையில், இந்த மருத்துவமனைக்குத் தற்காலிக பணி மாறுதலில் ஜீவானந்தம் என்ற ஆண் டாக்டர் இங்கு பணியில் சேர்ந்த பின்பு தனியார் மருத்துவமனைகளுக்கு உதவும் வகையில் சரியாகத் தாய்மார்களுக்குப் பிரசவம் பார்க்காத காரணத்தால் பிரசவம் பார்க்க வரும் தாய்மார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.
இப்போது ஒரு சில பிரசவங்கள் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை உள்ளது. ஆகவே இந்த ஆண் மருத்துவரை மாற்றிவிட்டு மருத்துவமனைக்குத் திறமையான பெண் மருத்துவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிராஸ்கட் ரோடு சாலையில் உள்ள ஆரம்பச் சுகாதார மையத்தில் பணிபுரியக்கூடிய டாக்டர் அவருடைய தனியார் கிளினிக்கில் முழு கவனம் செலுத்துவதால், பேறுகாலத்திற்கு வரக்கூடிய பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
உடனடியாக அவரை மாற்றி புதிய டாக்டரை நியமிக்க வேண்டும் என திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கிராஸ்கட் சாலையில் 8-ம் நம்பர் காய்கறி மார்க்கெட் அருகில் கோவை மாநகராட்சி சிடிஎம் ஹோம் மகப்பேறு மருத்துவமனை பல வருடங்களாக இயங்கி வருகிறது இம்மருத்துவமனையில் பெண் டாக்டர் பெண் செவிலியர்கள் பணிபுரிந்து வந்தனர்.
கடந்த காலங்களில் மாதந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப் பட்டு வந்த நிலையில், இந்த மருத்துவமனைக்குத் தற்காலிக பணி மாறுதலில் ஜீவானந்தம் என்ற ஆண் டாக்டர் இங்கு பணியில் சேர்ந்த பின்பு தனியார் மருத்துவமனைகளுக்கு உதவும் வகையில் சரியாகத் தாய்மார்களுக்குப் பிரசவம் பார்க்காத காரணத்தால் பிரசவம் பார்க்க வரும் தாய்மார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.
இப்போது ஒரு சில பிரசவங்கள் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை உள்ளது. ஆகவே இந்த ஆண் மருத்துவரை மாற்றிவிட்டு மருத்துவமனைக்குத் திறமையான பெண் மருத்துவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.