தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலர் மீனாலோகு கோவை மாநகராட்சி கமிஷனரிடம் புகார்.!!

ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் டாக்டரை மாற்ற வேண்டும். தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: ஆரம்ப சுகாதார மையத்தில் பணிபுரியும் டாக்டரை மாற்ற வேண்டும். தி.மு.க முன்னாள் பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிராஸ்கட் ரோடு சாலையில் உள்ள ஆரம்பச் சுகாதார மையத்தில் பணிபுரியக்கூடிய டாக்டர் அவருடைய தனியார் கிளினிக்கில் முழு கவனம் செலுத்துவதால், பேறுகாலத்திற்கு வரக்கூடிய பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

உடனடியாக அவரை மாற்றி புதிய டாக்டரை நியமிக்க வேண்டும் என திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் கிராஸ்கட் சாலையில் 8-ம் நம்பர் காய்கறி மார்க்கெட் அருகில் கோவை மாநகராட்சி சிடிஎம் ஹோம் மகப்பேறு மருத்துவமனை பல வருடங்களாக இயங்கி வருகிறது இம்மருத்துவமனையில் பெண் டாக்டர் பெண் செவிலியர்கள் பணிபுரிந்து வந்தனர்.

கடந்த காலங்களில் மாதந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப் பட்டு வந்த நிலையில், இந்த மருத்துவமனைக்குத் தற்காலிக பணி மாறுதலில் ஜீவானந்தம் என்ற ஆண் டாக்டர் இங்கு பணியில் சேர்ந்த பின்பு தனியார் மருத்துவமனைகளுக்கு உதவும் வகையில் சரியாகத் தாய்மார்களுக்குப் பிரசவம் பார்க்காத காரணத்தால் பிரசவம் பார்க்க வரும் தாய்மார்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது.

இப்போது ஒரு சில பிரசவங்கள் மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மருத்துவமனை உள்ளது. ஆகவே இந்த ஆண் மருத்துவரை மாற்றிவிட்டு மருத்துவமனைக்குத் திறமையான பெண் மருத்துவரை நியமிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...