அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு நகை பட்டறை ஓனர் தற்கொலை.!!

மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை காரணமாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கோவை: மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை காரணமாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை பெரிய கடை வீதி அருகே உள்ள கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் வயது 68, இவர் அந்த பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாகத் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார்.

அதனால் அவருக்கு மன உளைச்சலும் அதிகமானது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை சரியாக இல்லை. இதன் காரணமாக ஆனந்தகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

நேற்று வீட்டிலிருந்த அவர் வாழ்க்கையில் விரக்தியின் உச்சத்திற்குச் சென்று அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கினார்.

இதனைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனந்தகுமாரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெரிய கடைவீதி போலீசார் 174-வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...