மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை காரணமாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை: மன உளைச்சல் மற்றும் தூக்கமின்மை காரணமாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை பெரிய கடை வீதி அருகே உள்ள கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் வயது 68, இவர் அந்த பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாகத் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார்.
அதனால் அவருக்கு மன உளைச்சலும் அதிகமானது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை சரியாக இல்லை. இதன் காரணமாக ஆனந்தகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
நேற்று வீட்டிலிருந்த அவர் வாழ்க்கையில் விரக்தியின் உச்சத்திற்குச் சென்று அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனந்தகுமாரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெரிய கடைவீதி போலீசார் 174-வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை பெரிய கடை வீதி அருகே உள்ள கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் வயது 68, இவர் அந்த பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாகத் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்தார்.
அதனால் அவருக்கு மன உளைச்சலும் அதிகமானது. இதற்காக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் உடல்நிலை சரியாக இல்லை. இதன் காரணமாக ஆனந்தகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
நேற்று வீட்டிலிருந்த அவர் வாழ்க்கையில் விரக்தியின் உச்சத்திற்குச் சென்று அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனைப் பார்த்த வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனந்தகுமாரை மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெரிய கடைவீதி போலீசார் 174-வது சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.