குழந்தையிடம் செயின் பறித்த திருடனை தாக்கிய 5-பேர் மீது வழக்குப்பதிவு.!!

குழந்தையிடம் செயின் பறித்து தப்பி ஓட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். தர்ம அடி கொடுத்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் திருடனை தாக்கிய 5-பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: குழந்தையிடம் செயின் பறித்த திருடனைத் தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை பீளமேடு அருகே உள்ள வெற்றிவேல் நகரைச் சேர்ந்தவர் ராம் பிரகாஷ். இவரது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் சித்ரா சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் குழந்தையின் கழுத்திலிருந்த இரண்டு பவுன் தங்க செயினை பறித்துத் தப்பிச் செல்ல முயன்றவரைப் பார்த்த ராம் பிரகாஷ் சத்தம் போட்டார்.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். காவல்துறை நடத்திய விசாரணையில் அவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த துரைசாமி 57, ஓட்டுநர் என்பது தெரியவந்தது.

பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அவரை காவல்துறை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து பீளமேடு காவல்துறை செயின் பறித்த துரைசாமி தாக்கிய 5-பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...