பழ கமிஷன் மண்டியை இடம் மாற்ற கோரி மனு–உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் வாக்குறுதி.!!

கோயம்புத்தூர் புரூட்ஸ் கமிஷன் ஏஜென்ட் அசோசியேஷன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் 50-ஆண்டுகளாக கருப்பகவுண்டர், பவிழம், பெரியகடை, முத்து விநாயகர் கோவில் வீதிகளில் செயல்பட்டு வரும் பழ கமிஷன் மண்டியை மாற்றி அமைத்துக்கொள்ள வேறு இடம் தருமாறு கோரிக்கை வைத்தனர்.


கோவை: பழ கமிஷன் மண்டியை இடம் மாற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் வாக்குறுதி அளித்தார்.

கோயம்புத்தூர் புரூட்ஸ் கமிஷன் ஏஜென்ட் அசோசியேஷன் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் 50-ஆண்டுகளாக கருப்பகவுண்டர், பவிழம், பெரியகடை, முத்து விநாயகர் கோவில் வீதிகளில் செயல்பட்டு வரும் பழ கமிஷன் மண்டியை மாற்றி அமைத்துக்கொள்ள வேறு இடம் தருமாறு கோரிக்கை வைத்தனர்.



கோவையின் முக்கிய பகுதிகளில் செயல்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. குடியிருப்புகள், தங்கநகை வியாபாரம், பள்ளி மற்றும் வர்த்தகநிறுவனகள் அதிகம் உள்ளதால், வாகனங்களின் வருகை எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. ஆகவே, பழ கமிஷன் மண்டியை மாற்றி அமைத்திட மாற்று இடம் அரசு ஒத்துழைக்க வேண்டும், என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், பழ கமிஷன் மண்டி கோவையின் முக்கிய வீதிகளில் அமைத்துள்ளதால் கனரக வாகனங்கள் இச்சாலை வழியே வரவேண்டியுள்ளது. இதனால் பெரிய கடைவீதியில் போக்குவரத்து நெரிசலால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால், உடனடியாக இடத்தை ஒதுக்கித் தரக்கோரி முதலமைச்சரைச் சந்தித்து மனு அழித்த நிலைமையில் அவர் உடனடியாக மாற்றித் தருகின்றோம் என்று வாக்குறுதிக்கொடுத்தார். மேலும், புல்லுக்காடு, சுங்கம், பைபாஸ், போன்ற பகுதிகளில் அமைத்தால் போக்குவரத்துக்கு எளிதாக அமையும் என்றும் தங்களுக்குக் கனரக வாகனத்தின் செலவு குறையும் என்றும் குறிப்பிட்டனர்.

பழ கமிஷன் மண்டியால் மாநகராட்சிக்கு மாதம் 30,000 ரூபாய் வருமானம் வருகின்றது. இதனைக் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்ததை அடுத்து, கோவை ஆணையாளரிடம் கலந்தாலோசித்த பின் உடனடி முடிவு எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...