ஆம்புலன்ஸ் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவமனை முன்பாக மதுபோதையில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் முத்தனம்பாளையம், பாலாஜி நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார்.
அதே பகுதியில் மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவாக உள்ள விக்னேசின் நண்பர் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த அசோக்குமார். இந்நிலையில் நேற்று இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் இரண்டு ஆம்புலன்ஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேசின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் இறந்து கிடந்துள்ளார்.
பின்னர், இது குறித்து அக்கம்பக்கத்தினர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் முத்தனம்பாளையம், பாலாஜி நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார்.
அதே பகுதியில் மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவாக உள்ள விக்னேசின் நண்பர் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த அசோக்குமார். இந்நிலையில் நேற்று இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் இரண்டு ஆம்புலன்ஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேசின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் இறந்து கிடந்துள்ளார்.
பின்னர், இது குறித்து அக்கம்பக்கத்தினர் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்புலன்ஸ் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.