கோவில்களை பராமரிக்க திறமை அற்றதாக அறநிலையத்துறை உள்ளது- பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா.!!

அறநிலையத்துறைக்குக் கீழ் உள்ள கோவில்களைப் பராமரிக்கத் திறமை அற்றதாக அறநிலையத்துறை உள்ளது என அறநிலையத்துறை உடனடியாக ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும், அதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம் என ஹெச் ராஜா பேட்டி.


கோவை: அறநிலையத்துறைக்குக் கீழ் உள்ள கோவில்களைப் பராமரிக்கத் திறமை அற்றதாக அறநிலையத்துறை உள்ளது என அறநிலையத்துறை உடனடியாக ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும், அதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம் என திருப்பூரில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா பேட்டியளித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நெருப்பெரிச்சல் மண்டல பாஜக சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச் ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் விரைவில் 100 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளால் முடியாததைப் பிரதமர் மோடி செய்திருக்கிறார் எனவும், தமிழகத்தில் தடுப்பூசி முகாம்களில் மத்திய அரசால் இலவசமாக வழங்கப்பட்ட தடுப்பூசி என விளம்பரப் பதாகை வைக்க வேண்டும் எனவும் அதேபோல் ரேஷன் கடைகளிலும் மத்திய அரசின் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் அரிசி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அறநிலையத்துறை சார்பில் கோவில்களிலிருந்து தங்கத்தை எடுக்கும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், தங்கத்தை உருக்கும் திட்டம் குறித்த அரசாணை அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப் படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

அறநிலையத் துறைக்குக் கீழ் உள்ள கோவில்களைப் பராமரிக்கத் திறமையற்ற துறையாக இருப்பதாகவும், அறநிலையத்துறையின் கீழ் உள்ள 20-சதவீத கோயில்கள் பராமரிப்பில்லாமல் பயன்பாடற்று கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் புதிய கோவில்களைக் கையகப்படுத்துவதை அறநிலையத்துறை கைவிட வேண்டும் எனவும் உடனடியாக ஆலயங்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும். அதற்கான பணிகளைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் அதுவரை சட்டப்படி கோவில்களைப் பராமரிக்க வேண்டும் எனவும் அறநிலையத் துறையில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வேறு துறைகளுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதேபோல் அறநிலையத்துறையின் கீழ் கட்டப்படும் கல்லூரிகளில் மதக் கல்வி மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...