கோவையில் சோமனூருக்கு சொகுசு பேருந்து மட்டும் இயக்கம்..! இலவச பேருந்து பயணத்தை பயன்படுத்த முடியாத பெண்கள் சாதாரண பேருந்து விட கோரிக்கை!

பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை உக்கடம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து சோமனூர் வழியாக செல்வதற்கு சொகுசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் இலவச பயண சலுகை மறுக்கப்படுவதாக பெண் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என உத்தரவிட்டார்.

அதன்படி, சிவப்பு நிறங்கள் சொகுசு பேருந்துகள் தவிர மற்ற நகரப் பேருந்துகளில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம்.

இந்நிலையில் உக்கடம் - சோமனூர், காந்திபுரம் - சோமனூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலும் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது:-

உக்கடத்தில் இருந்து அவிநாசி சாலை வழித்தடத்தில் சாதாரண பேருந்துகளை இயக்கப்படுவதில்லை. சூலூர் வழியாக சோமனூர் செல்லும் வழித்தடத்தில் மட்டும் 2 சாதாரண பேருந்துகள் இயங்குகின்றன. காந்திபுரத்தில் இருந்து சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு பயணச் சலுகை எங்களால் பயன்படுத்த முடியவில்லை. கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே இரு வழித்தடங்களிலும் சாதாரண பேருந்துகளை இயக்க வேண்டும். என்றனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் கேட்டபோது:-

உக்கடம் - சோமனூர், காந்திபுரம் - சோமனூர் செல்லும் வழித்தடத்தில் தற்போது இரண்டு சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நீலாம்பூர் வரை இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சோமனூர் வழி தடத்தில் செல்வோர் நகரப் பேருந்துகள் தவிர புறநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றன.

இருப்பினும் பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...