கோவையில் சோமனூருக்கு சொகுசு பேருந்து மட்டும் இயக்கம்..! இலவச பேருந்து பயணத்தை பயன்படுத்த முடியாத பெண்கள் சாதாரண பேருந்து விட கோரிக்கை!

பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை உக்கடம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து சோமனூர் வழியாக செல்வதற்கு சொகுசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் இலவச பயண சலுகை மறுக்கப்படுவதாக பெண் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என உத்தரவிட்டார்.

அதன்படி, சிவப்பு நிறங்கள் சொகுசு பேருந்துகள் தவிர மற்ற நகரப் பேருந்துகளில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம்.

இந்நிலையில் உக்கடம் - சோமனூர், காந்திபுரம் - சோமனூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலும் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது:-

உக்கடத்தில் இருந்து அவிநாசி சாலை வழித்தடத்தில் சாதாரண பேருந்துகளை இயக்கப்படுவதில்லை. சூலூர் வழியாக சோமனூர் செல்லும் வழித்தடத்தில் மட்டும் 2 சாதாரண பேருந்துகள் இயங்குகின்றன. காந்திபுரத்தில் இருந்து சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு பயணச் சலுகை எங்களால் பயன்படுத்த முடியவில்லை. கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே இரு வழித்தடங்களிலும் சாதாரண பேருந்துகளை இயக்க வேண்டும். என்றனர்.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் கேட்டபோது:-

உக்கடம் - சோமனூர், காந்திபுரம் - சோமனூர் செல்லும் வழித்தடத்தில் தற்போது இரண்டு சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நீலாம்பூர் வரை இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சோமனூர் வழி தடத்தில் செல்வோர் நகரப் பேருந்துகள் தவிர புறநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றன.

இருப்பினும் பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...