பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: கோவை உக்கடம் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து சோமனூர் வழியாக செல்வதற்கு சொகுசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் இலவச பயண சலுகை மறுக்கப்படுவதாக பெண் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என உத்தரவிட்டார்.
அதன்படி, சிவப்பு நிறங்கள் சொகுசு பேருந்துகள் தவிர மற்ற நகரப் பேருந்துகளில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம்.
இந்நிலையில் உக்கடம் - சோமனூர், காந்திபுரம் - சோமனூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலும் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது:-
உக்கடத்தில் இருந்து அவிநாசி சாலை வழித்தடத்தில் சாதாரண பேருந்துகளை இயக்கப்படுவதில்லை. சூலூர் வழியாக சோமனூர் செல்லும் வழித்தடத்தில் மட்டும் 2 சாதாரண பேருந்துகள் இயங்குகின்றன. காந்திபுரத்தில் இருந்து சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசு பயணச் சலுகை எங்களால் பயன்படுத்த முடியவில்லை. கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே இரு வழித்தடங்களிலும் சாதாரண பேருந்துகளை இயக்க வேண்டும். என்றனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் கேட்டபோது:-
உக்கடம் - சோமனூர், காந்திபுரம் - சோமனூர் செல்லும் வழித்தடத்தில் தற்போது இரண்டு சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நீலாம்பூர் வரை இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சோமனூர் வழி தடத்தில் செல்வோர் நகரப் பேருந்துகள் தவிர புறநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றன.
இருப்பினும் பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என உத்தரவிட்டார்.
அதன்படி, சிவப்பு நிறங்கள் சொகுசு பேருந்துகள் தவிர மற்ற நகரப் பேருந்துகளில் பெண்கள் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்கிக் கொள்ளலாம்.
இந்நிலையில் உக்கடம் - சோமனூர், காந்திபுரம் - சோமனூர் செல்லும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலும் சொகுசு பேருந்துகள் இயக்கப்படுவதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது:-
உக்கடத்தில் இருந்து அவிநாசி சாலை வழித்தடத்தில் சாதாரண பேருந்துகளை இயக்கப்படுவதில்லை. சூலூர் வழியாக சோமனூர் செல்லும் வழித்தடத்தில் மட்டும் 2 சாதாரண பேருந்துகள் இயங்குகின்றன. காந்திபுரத்தில் இருந்து சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசு பயணச் சலுகை எங்களால் பயன்படுத்த முடியவில்லை. கட்டணம் அதிகமாக உள்ளது. எனவே இரு வழித்தடங்களிலும் சாதாரண பேருந்துகளை இயக்க வேண்டும். என்றனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரியிடம் கேட்டபோது:-
உக்கடம் - சோமனூர், காந்திபுரம் - சோமனூர் செல்லும் வழித்தடத்தில் தற்போது இரண்டு சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நீலாம்பூர் வரை இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், சோமனூர் வழி தடத்தில் செல்வோர் நகரப் பேருந்துகள் தவிர புறநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றன.
இருப்பினும் பயணிகளின் கோரிக்கை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.