வால்பாறையில் கடந்த மாதம் பிடிக்கப்பட்ட புலியின் உடல்நிலை குறித்து வனத்துறை முதன்மை வனபாதுகாவலர் நேரில் ஆய்வு..!

வனத்துறை வல்லுனர்கள் புலியை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் குணமடைந்த பின்னர் குட்டிபுலி மீண்டும் வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார்.


கோவை: வால்பாறையில் கடந்த 28ம் தேதி பிடிக்கப்பட்ட புலியின் உடல்நிலை குறித்து வனத்துறை முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் நேரில் ஆய்வு செய்தார்

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் குடியிருப்பு பகுதியில் ஒற்றை புலி நடமாட்டம் இருப்பதாக கடந்த 28ம் தேதி அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து தகவலை அடுத்து அங்கு விரைந்து சென்ற மானாம்பள்ளி வனச்சரக மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புலி அப்பகுதியில் இருப்பதை உறுதி செய்யப்பட்டனர்.

பின்னர், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின் பெயரில் குடியிருப்பு பகுதியில் இருந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் ஈடுபட்டு புலியை பிடித்தனர்.

அப்போது, புலி மிகவும் சோர்வுற்ற நிலையிலும், உடலில் காயங்களுடன் மற்றும் முள்ளம் பன்றியுடன் சண்டையிட்டதால் முள்ளம் பன்றியின் முட்கள் புலியின் உடலில் குத்தி இருப்பதால் அங்கிருந்து நகர முடியாமல் இருந்ததையும் வனத்துறை உறுதி செய்தனர்.



இதையடுத்து, புலியை வால்பாறை வனச்சரக பகுதியில் உள்ள மனித விலங்கு மோதல் தடுப்பு அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு கால்நடை மருத்துவர்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால், மனித விலங்கு மோதல் அலுவலகம் நகர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் உள்ளதால் வாகன இரைச்சல் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மேலும் புலி மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் கூறி, புலியை அப்பகுதியில் இருந்து இடமாற்றம் செய்ய வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நிராஜ் உத்தரவின் பேரில் வால்பாறை வனச்சரக ரொட்டிக் கடை பகுதியில் உள்ள புலியை மானாம்பள்ளி வனச்சரகத்தில் இடமாற்றம் செய்ய வனத்துறை ஏற்பாடு செய்யப்பட்டு, பெரிய அளவில் கூண்டு அமைக்கப்பட்டு 13 நாட்களுக்குப் பிறகு மானாம்பள்ளி வனச்சரகத்தில் புலியை இடமாற்றம் செய்தனர்.



இந்த நிலையில், நேற்று புலியின் உடல் நலம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக வனத் துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நிரஜ் மானாம்பள்ளி பகுதிக்கு நேரில் சென்று புலியை பார்வையிட்டார்.



இதனை தொடர்ந்து பேசிய அவர், புலி மிகவும் சுறுசுறுப்புடன் நல்ல நிலையில் உள்ளதாகவும் மேலும் மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறை வல்லுனர்கள் புலியை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இவர்கள் முடிவு செய்த பின்னர் குட்டிபுலி மீண்டும் வனப்பகுதியில் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...