கோட்டை பிரிவு அருகே குடிபோதையில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி.!!!

குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் படுத்த நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரோடு செக்கிங் ரயில் ஏறி இறங்கியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.


கோவை: குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் படுத்த நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரோடு செக்கிங் ரயில் ஏறி இறங்கியதில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சின்னமத்தம்பாளையம் வினோபாஜி நகரைச் சேர்ந்தவர் அப்புசாமி என்பவரின் மகன் பத்ரசாமி (35). கூலி வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று கோட்டை பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் சென்று படுத்துக் கொண்டார்.

சிறிது நேரத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரோடு செக்கிங் ரயில் அவர் மீது ஏறி இறங்கியதாகத் தெரிகிறது.

இதில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்து உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை மற்றும் மேட்டுப்பாளையம் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை இறந்த பத்ரிசாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...