குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் படுத்த நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரோடு செக்கிங் ரயில் ஏறி இறங்கியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை: குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் படுத்த நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரோடு செக்கிங் ரயில் ஏறி இறங்கியதில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சின்னமத்தம்பாளையம் வினோபாஜி நகரைச் சேர்ந்தவர் அப்புசாமி என்பவரின் மகன் பத்ரசாமி (35). கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று கோட்டை பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் சென்று படுத்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரோடு செக்கிங் ரயில் அவர் மீது ஏறி இறங்கியதாகத் தெரிகிறது.
இதில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்து உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை மற்றும் மேட்டுப்பாளையம் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை இறந்த பத்ரிசாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சின்னமத்தம்பாளையம் வினோபாஜி நகரைச் சேர்ந்தவர் அப்புசாமி என்பவரின் மகன் பத்ரசாமி (35). கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று கோட்டை பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு குடிபோதையில் ரயில்வே தண்டவாளத்தில் சென்று படுத்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த ரோடு செக்கிங் ரயில் அவர் மீது ஏறி இறங்கியதாகத் தெரிகிறது.
இதில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்து உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் காவல்துறை மற்றும் மேட்டுப்பாளையம் ரயில்வே காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை இறந்த பத்ரிசாமி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.