உள்ளாட்சித் தேர்தலில் பணம் கொடுத்து ஜனநாயக விரோத வெற்றியை திமுக பெற்றது- பொள்ளாச்சி ஜெயராமன்.!!!

நடந்து முடிந்த 9-மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பணம் கொடுத்து ஜனநாயக விரோத வெற்றியை திமுக பெற்றது என்று திருப்பூர் முன்னாள் துணைச் சபாநாயகர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான பொள்ளாச்சி V.ஜெயராமன் பேட்டியளித்தார்.



திருப்பூர்: நடந்து முடிந்த 9-மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பணம் கொடுத்து ஜனநாயக விரோத வெற்றியை திமுக பெற்றது என்று திருப்பூர் முன்னாள் துணைச் சபாநாயகர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான பொள்ளாச்சி V.ஜெயராமன் பேட்டியளித்தார்.



தமிழகம் முழுவதும் அதிமுகவின் பொன்விழா ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாநகர மாவட்ட அஇஅதிமுக கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மறைந்த முதல்வர்கள் புரட்சித்தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா ஆகியோர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மேலும் திருப்பூர் மாநகரம் முழுவதும் 10-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானத்தைப் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தார்.

இதையடுத்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், அதிமுக என்பது வல்லுநர்கள் அறிஞர்களால் உருவாக்கப்படவில்லை பல லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒன்றுகூடி புரட்சித்தலைவரிடம் உருவாக்கச் சொன்ன இயக்கம் தான் அதிமுக, அன்று முதல் இன்று வரை மக்களுக்கான சேவைப் பணியில் அதிமுக ஈடுபட்டுவருகிறது.

புதிதாகத் தோன்றிய பல கட்சிகள் ஓரிரு தோல்விக்குப் பிறகு காணாமல் போய்விடுகிறது, எத்தனை தோல்வி வந்தாலும் இறுதியாக மக்கள் மனதில் இடம் பிடித்து வெற்றி வாகை சூடும் ஒரே கட்சி அதிமுக மட்டும்தான்.

வருகின்ற காலங்களில் தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்று அனைத்து தேர்தல்களிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். நடந்து முடிந்த 9-மாவட்ட ஊராட்சி தேர்தல்களில் 2000, 3000 பணம் கொடுத்துக் குறுக்கு வழியில் ஜனநாயக விரோத வெற்றியைப் பெற்றது தான் திமுக, வரப்போகின்ற மாநகராட்சி, நகராட்சி தேர்தல்களில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தினால் திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும், கடவுள் சொத்து பாதுகாக்கப்பட்டு அதை மக்களுக்குப் பயன்படுத்த வேண்டும் அதுதான் அதிமுகவின் எண்ணம், புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோர் நினைவிடத்திற்குத் தினசரி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து செல்கின்றனர்.

அதுபோல் தான் சசிகலாவும் நேற்று வந்துள்ளார் என்று அதிமுக பொன்விழா ஆண்டு நிகழ்வில் முன்னாள் துணைச் சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி V.ஜெயராமன் பேட்டி அளித்தார்.

இதையடுத்து கேவிஆர் நகர் நடைபெறும் விசேஷங்கள், சுபகாரியங்கள் மற்றும் ஈமச்சடங்குகள் ஆகியவற்றுக்குப் பொதுமக்கள் பயன் பெறுவதற்காக இலவசமாக 10-டேபிள்கள் 100-ஷேர்களை அப்பகுதி பொதுமக்களிடம் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...