டெங்கு பரவாமல் தடுக்கும் பணிகள் தீவிரம் - கோவையில் டெங்கு மஸ்தூர்கள் நியமனம்.!!

டெங்கு பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் டெங்கு மஸ்தூர்கள் 20-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கொசு மருந்து தெளிப்பு, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: டெங்கு பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் டெங்கு மஸ்தூர்கள் 20-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கொசு மருந்து தெளிப்பு, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் 12-ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் 228-கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் 1,200-குக்கிராமங்கள் உள்ளன. பொதுவாகக் கோவையில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை டெங்குகாய்ச்சல் அதிகமாக இருக்கும்.

ஆண்டு முழுவதும் டெங்கு பரவல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். இதன்படி ஊராட்சிப் பகுதிகளில் பிரத்தியோக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பருவ மழைக்காலம் தொடங்கித் தொடர்ந்து சாக்கடைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஊராட்சி பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-


கிராம ஊராட்சிகளில் அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள் மூலம் சாலைகளைச் சுத்தப்படுத்துதல், சாக்கடைகளைத் தூர்வாருதல், தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுதல், போன்ற திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 20-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். டெங்கு மஸ்தூர்கள் எனப்படும் இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கொசு மருந்து தெளிப்பு, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...