டெங்கு பரவாமல் தடுக்கும் பணிகள் தீவிரம் - கோவையில் டெங்கு மஸ்தூர்கள் நியமனம்.!!

டெங்கு பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் டெங்கு மஸ்தூர்கள் 20-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கொசு மருந்து தெளிப்பு, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: டெங்கு பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் டெங்கு மஸ்தூர்கள் 20-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கொசு மருந்து தெளிப்பு, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் 12-ஊராட்சி ஒன்றியங்களில் கீழ் 228-கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த கிராம ஊராட்சிகளில் 1,200-குக்கிராமங்கள் உள்ளன. பொதுவாகக் கோவையில் ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை டெங்குகாய்ச்சல் அதிகமாக இருக்கும்.

ஆண்டு முழுவதும் டெங்கு பரவல் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். இதன்படி ஊராட்சிப் பகுதிகளில் பிரத்தியோக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பருவ மழைக்காலம் தொடங்கித் தொடர்ந்து சாக்கடைகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஊராட்சி பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-


கிராம ஊராட்சிகளில் அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள் மூலம் சாலைகளைச் சுத்தப்படுத்துதல், சாக்கடைகளைத் தூர்வாருதல், தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுதல், போன்ற திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பரவலைத் தடுக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 20-பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். டெங்கு மஸ்தூர்கள் எனப்படும் இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கொசு மருந்து தெளிப்பு, கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...