மழை வேண்டி, கோவை அட்டுக்கல் மலைவாழ் மக்கள் திருவிழா நடத்தி வழிபாடு..!

பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து, வேட்டைக்கார சாமியின் கண்களை கட்டி, குதிரையில் சாமியை எடுத்து சென்று மலைக்கோவிலில் வைத்து கண்திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் மழை வேண்டி அவர்கள் வணங்கும் காவல் தெய்வமான வேட்டைக்காரன் கோவிலில் பாரம்பரிய திருவிழா நடைபெறும்.

கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த இவ்விழா இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக, குதிரை வாகனத்தில் வேட்டைக்கார சாமியை மண்சிலை வடிவத்தில் அவர்களது குடியிருப்பு பகுதியில் உள்ள கோவிலில் இருந்து மலைப்பகுதியில் உள்ள வேட்டைக்காரன் கோவில் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லும் விழா நடைப்பெற்றது.



முன்னதாக, மலைவாழ் மக்கள் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து, வேட்டைக்கார சாமிக்கு அருள் வரவழைத்து மேல் தாளத்துடன், பட்டாசு வெடித்து, அழைத்து சென்றனர்.‌ கண்கள் கட்டப்பட்ட நிலையில், குதிரையில் வேட்டைக்கார சாமியை எடுத்து சென்று மலைக்கோவிலில் வைத்து கண்திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அதைத்தொடர்ந்து, மழை வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவை தொடர்ந்து நாளை கிடா வெட்டி ஊர்மக்கள் அனைவருக்கும் விருந்து வைக்கும் நிகழ்வு

நடைப்பெறவுள்ளது. மலைவாழ் மக்கள் நடத்திய இந்த பாரம்பரிய விழாவில் வனத்துறையினர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...