கோவையில் இருவேறு பகுதிகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களில் 9 பவுன் நகை கொள்ளை..!!

இதில் மளிகை கடை உரிமையாளரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 7 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவையில் மளிகை கடை உரிமையாளரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 7 பவுன் நகையும் பேருந்தில் பயணம் செய்த பெண் ஆசிரியையிடம் 2 பவுன் மற்றும் ஏடிஎம் கார்டு உட்பட பொருட்களையும் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையம் 2வது வீதியில் மளிகை கடை வைத்திருப்பவர் வெற்றிவேல் (55). இவரது மனைவி சந்தானம் (50). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு சந்தானம் கடையில் இருந்தார்.

அப்போது, பைக்கில் வந்த இருவர் சந்தானத்தின் கழுத்திலிருந்த ஏழு பவுன் நகையை பறித்தார். அதிர்ச்சியடைந்த சந்தானம் சத்தம் போட்டார். இருப்பினும் இருவரும் தப்பினர்.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல, கோவை ராமநாதபுரம் ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரி மனோகரி (44). தனியார் பள்ளி ஆசிரியையான இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் இருந்து காந்திபுரம் வந்து அங்கிருந்து கணபதிக்கு பேருந்தில் சென்றார்.

இந்த நிலையில், மர்மநபர்கள் கவுரி மனோகரியின் பர்ஸை திருடிச் சென்றனர். பர்சில் இரண்டு பவுன் செயின், 2,000 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு ஆகியவை இருந்தன.

பின்னர், இது குறித்து கவுரிமனோகரி சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...