இதில் மளிகை கடை உரிமையாளரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 7 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் மளிகை கடை உரிமையாளரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 7 பவுன் நகையும் பேருந்தில் பயணம் செய்த பெண் ஆசிரியையிடம் 2 பவுன் மற்றும் ஏடிஎம் கார்டு உட்பட பொருட்களையும் திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை குனியமுத்தூர் அடுத்து இடையர்பாளையம் 2வது வீதியில் மளிகை கடை வைத்திருப்பவர் வெற்றிவேல் (55). இவரது மனைவி சந்தானம் (50). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இரவு சந்தானம் கடையில் இருந்தார்.
அப்போது, பைக்கில் வந்த இருவர் சந்தானத்தின் கழுத்திலிருந்த ஏழு பவுன் நகையை பறித்தார். அதிர்ச்சியடைந்த சந்தானம் சத்தம் போட்டார். இருப்பினும் இருவரும் தப்பினர்.
இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியவர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல, கோவை ராமநாதபுரம் ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுரி மனோகரி (44). தனியார் பள்ளி ஆசிரியையான இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் இருந்து காந்திபுரம் வந்து அங்கிருந்து கணபதிக்கு பேருந்தில் சென்றார்.
இந்த நிலையில், மர்மநபர்கள் கவுரி மனோகரியின் பர்ஸை திருடிச் சென்றனர். பர்சில் இரண்டு பவுன் செயின், 2,000 ரூபாய், ஏ.டி.எம்., கார்டு ஆகியவை இருந்தன.
பின்னர், இது குறித்து கவுரிமனோகரி சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.