உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு காவல் துறையினருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசிய சீதையின் மைந்தன் என்கிற தட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபகாலமாக தந்தை பெரியார் பற்றியும், திராவிடர் இயக்க தலைவர்களை பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழிய பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் சீதையின் மைந்தன் என்கிற நபர் 'ழகரம் வாய்ஸ்' யூடியூப் சேனலில் கடந்த 11/10/21 தேதியன்று தந்தை பெரியாரைப் பற்றியும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றியும் இழிவுபடுத்தி, மிகவும் கீழ் தரமாக பேசியது தொடர்பாக, சீதையின் மைந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாநகர காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் சம்பந்தமாக உடனடியாக களத்தில் இறங்கிய தமிழ்நாடு காவல்துறையினர் தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களை அவதூறு பரப்பிய சீதையின் மைந்தன் என்கிற நபரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில், உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு காவல் துறையினருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக தந்தை பெரியார் பற்றியும், திராவிடர் இயக்க தலைவர்களை பற்றியும் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழிய பேரியக்கத்தின் நிறுவனத் தலைவர் சீதையின் மைந்தன் என்கிற நபர் 'ழகரம் வாய்ஸ்' யூடியூப் சேனலில் கடந்த 11/10/21 தேதியன்று தந்தை பெரியாரைப் பற்றியும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றியும் இழிவுபடுத்தி, மிகவும் கீழ் தரமாக பேசியது தொடர்பாக, சீதையின் மைந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாநகர காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் சம்பந்தமாக உடனடியாக களத்தில் இறங்கிய தமிழ்நாடு காவல்துறையினர் தந்தை பெரியார் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களை அவதூறு பரப்பிய சீதையின் மைந்தன் என்கிற நபரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில், உடனடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், தமிழ்நாடு காவல் துறையினருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.