மைசூரு உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படும் டி - 23 ஆட்கொல்லி புலி..!!

டி23 புலியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், 4 கால்நடை மருத்துவர்கள் புலியை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


கோவை: நீலகிரி மாவட்டத்தில் மசனகுடியில் பிடிபட்ட ஆட்கொல்லி புலி மைசூரு உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தும்போது அந்தப் புலிகளுக்கு எண்கள் கொடுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள புலிகளில் ஒன்று 13 வயதுடையை இந்த டி-23 புலி.

அந்தப் புலி மசினகுடியில் கெளரி என்ற பெண்ணைக் கடந்த ஆண்டு அடித்துக் கொன்றது. பின்னர், அப்பகுதியிலிருந்து கூடலூர் அருகே உள்ள தேவன் எஸ்டேட் பகுதிக்கு நகர்ந்த புலி, கடந்த சில மாதங்களில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் அடித்துக் கொன்றது. இதைத் தவிர அப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் கொன்றது. இதற்கிடையில், அப்புலி மசினகுடி அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த பசுவன் என்பவரைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடித்துக் கொன்றது. இதனால், புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் வனத்துறை அதிகாரி தேடுதல் வேட்டையில் உதயன், சீனிவாசன் ஆகிய கும்கி யானைகள், அதவை, ராணா ஆகிய மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால், அந்த புலி வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. புலியை பிடிக்க முயன்றும் முடியாத நிலையில் புலியை வேட்டையாடி பிடிக்க முதன்மை வன உயிரின பாதுகாவலர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவரும், இந்திய கால்நடைகளுக்கான மக்கள் அமைப்பும் அவசர வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் முடிவில் புலியை சுட்டுக்கொல்ல உயர் நீதிமன்றம் தடை விதித்தது. அதனையடுத்து, அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில், அக்டோபர் 14ம் தேதி இரவு புலிக்கு இரு முறை மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், புலி அடர்ந்த புதருக்குள் பதுங்கிச் சென்றது. இந்நிலையில், மசினகுடி அருகே புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்டறிந்தனர்.

மசினகுடியில் இருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள புதருக்குள் டி-23 புலி பதுங்கியிருந்தது. மாயார் வனத்தில் கூற்றுப்பாறை பகுதியில் நடமாடிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி நேற்று (அக்., 15) மதியம் உயிருடன் பிடித்தனர். 22 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு புலி பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சிகிச்சைக்குப் பின் மயக்க ஊசி செலுத்திப் பிடிபட்ட புலி மைசூரு வனவிலங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மைசூரு உயிரியல் பூங்காவில் உள்ள மீட்பு மையத்திற்கு டி23 புலி கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டி23 புலியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், 4 கால்நடை மருத்துவர்கள் புலியை கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...