கோவையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தும், வேன் மோதியும் 2-பேர் பலி.!!

கோவையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தும், வேன் மோதியும் 2-பேர் பலி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தும், வேன் மோதியும் 2-பேர் பலி உயிரிழந்தனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள சத்யா காலனியைச் சேர்ந்தவர் தர்மா வயது 37, கூலி தொழிலாளி. நேற்று மாலை இவர் தனது மொபட்டில் வடவள்ளி ரோட்டில் சென்றார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடியவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல கோவை செட்டிபாளையம் ஓராட்டுகுப்பை பகுதியைச் சேர்ந்த சடையப்பன் என்பவரின் மகன் கார்த்திக் (33). லாரி டிரைவரான இவர் தனது நண்பர்களான குப்புராஜ் என்பவரின் மகன் கார்த்திக் (24) மற்றும் மணிகண்டன் என்பவரின் மகனான மணிவாசகம்( 33) ஆகியோருடன் பைக்கில் செட்டி பாளையத்தில் இருந்து வடசித்தூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த சரக்கு வேன் ஒன்று பைக் மீது மோதியது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டனர். இதில் பைக்கை ஓட்டி வந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் பைக்கில் அமர்ந்திருந்த கார்த்திக் (24) மற்றும் மணிவாசகம் (33) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே கிடந்தனர். அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த செட்டி பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்த கோவை வேலாண்டிபாளையம் பழனி கோனார் வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் விக்னேஷ் (21) என்ற டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...