கோவையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தும், வேன் மோதியும் 2-பேர் பலி.!!

கோவையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தும், வேன் மோதியும் 2-பேர் பலி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் பைக்கில் இருந்து தவறி விழுந்தும், வேன் மோதியும் 2-பேர் பலி உயிரிழந்தனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள சத்யா காலனியைச் சேர்ந்தவர் தர்மா வயது 37, கூலி தொழிலாளி. நேற்று மாலை இவர் தனது மொபட்டில் வடவள்ளி ரோட்டில் சென்றார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடியவரை அந்த வழியாகச் சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல கோவை செட்டிபாளையம் ஓராட்டுகுப்பை பகுதியைச் சேர்ந்த சடையப்பன் என்பவரின் மகன் கார்த்திக் (33). லாரி டிரைவரான இவர் தனது நண்பர்களான குப்புராஜ் என்பவரின் மகன் கார்த்திக் (24) மற்றும் மணிகண்டன் என்பவரின் மகனான மணிவாசகம்( 33) ஆகியோருடன் பைக்கில் செட்டி பாளையத்தில் இருந்து வடசித்தூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த சரக்கு வேன் ஒன்று பைக் மீது மோதியது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டனர். இதில் பைக்கை ஓட்டி வந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் பைக்கில் அமர்ந்திருந்த கார்த்திக் (24) மற்றும் மணிவாசகம் (33) ஆகிய இருவரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே கிடந்தனர். அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த செட்டி பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மேலும் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிவந்த கோவை வேலாண்டிபாளையம் பழனி கோனார் வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரின் மகன் விக்னேஷ் (21) என்ற டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...